Tuesday, August 10, 2010

கருக்கிய நாளிலேயே கருக்கொள்கிறோம்!

தனது இரத்த உறவுகளைவிட இன விடுதலையே முதன்மைப்பணி என உறுதிகொண்டு, இன விடுதலைக்காகக் களம் கண்டு, வரலாறாய் - மண்ணில் விதைகளாய் - அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டிகளாய்ப் போய்விட்ட போராளிகளின் அகக்கடமைகளைத் தம் தோளில் ஏற்று அன்னையாய், தந்தையாய், அண்ணனாய், தோழனாய் கடமையாற்றிட நம் தோழன் கண்ட கனவுதான் செஞ்சோலை.

ஈழம் ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையில் பலபாடங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. நாட்டு விடுதலைப் பணியையும், நாட்டுப் பணிக்காக போராடிய போராளிகளின் வீட்டுப்பணியையும் ஒருசேரத் தூக்கிச் சுமந்த அக்கறை கொண்ட தலைமை - சக தோழர்களின் சுயமரியாதையையும் அவர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் ஆயிரந்தடவை யோசித்து யோசித்து திட்டமிட்டுப் பணியாற்றும் தாய்மை இவற்றைத்தான் மாவீரர்கள் துயிலும் இல்லங்களாகவும் செஞ்சோலைகளாகவும் கண்டோம்.

தமிழ்நாட்டில், விடுதலைப்போராட்டத்தின் கருவிகள் வேறு. போராட்டத்தின் தன்மையும் வேறானது. நேரடியாகக் கொல்லும் எதிரி நம்மிடம் இல்லை. மூளைக்கு இடப்பட்ட விலங்குகளை உடைத்தெறியவேண்டிய கருவிகள்தான் இங்கு தேவை. இங்கே அடிப்படையாக பண்பாட்டுப்புரட்சி நடக்க வேண்டியுள்ளது.

கருவிகளும் களங்களும் மாறியிருக்கலாம் ஆனால் களப்பணியாற்றும் தோழர்களின் உணர்வுகள் ஒன்றுதான். அப்படி தமிழ்நாட்டில் போராட்டக்களத்தில் உரிய பணியாற்றிவிட்டு இன்று தன்னந்தனியே கவனிப்பாரற்றுப் போய்விட்ட எம் முன்னோடிகளைப் பாதுகாக்கவேண்டும். விதைநெல்லாய் இச்சமுதாய விடுதலைக்கு அவர்கள் பயன்படுத்தப்படவேண்டும். பெரியார் காலத்தில் முகிழ்த்திருந்த சுயமரியாதைப் பயிர் செவ்வாழையாய் ஓங்கிவளர்ந்து இச்சமுதாயத்திற்குப் பயன்பட ஒரு முட்டுக்கொடுக்கும் அளவிலாவது ஒரு பணியைச் செய்ய வேண்டும் என்ற பல தோழர்களின் எண்ணஒட்டங்களில் உருவானது தான் கருந்திணை.

ஆகஸ்ட் 14 . செஞ்சோலை கருகிய நாளில் கருந்திணைச்செயலகம் தொடக்கம். மிக மிக எளிமையாக ஆனால் மிகவும் அழுத்தமாகத் தொடங்குகிறோம். ஒரு ஐம்பது பேரைத் தான் அழைத்திருக்கிறோம். அதுவும் குறுஞ்செய்தி வழியாக. தொடங்கி வைப்பவர் தோழர் ஆசிட் தியாகராசன். பிப்ரவரி 14 அன்று திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஒரு கருந்திணைக் கலந்துரையாடலை நடத்தினோம். அதில் மிகப் பெரிய அளவிலான கருந்திணை விடுதி தொடங்கப்படுவதற்கு முன்னால் - அந்தப் பணி திட்டமிட்டு செயல்வடிவம் பெறும் வரை தற்காலிகமாக மிக முக்கியமாக ஆதரவு தேவைப்படும் தோழர்களுக்காவது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் அதற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்றும் பேசி முடித்தோம். அதன்படி இந்த ஆறுமாத காலத்திற்குள் திண்டுக்கல் நகருக்கு அருகே நத்தம் சாலையில் முத்தமிழ்நகரில் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் ஒரு தங்குமிடத்தை உருவாக்கியுள்ளோம். இடம் தயாராகிவிட்டது. அதை நடத்தவேண்டியது எப்படி? என்பதை கலந்துபேச அடுத்தகட்ட கலந்துரையாடல் கூட்டம் 14.08.10 மாலை 5 முதல் 15.08.10 பகல் 1 வரை நடைபெற உள்ளது. வர இயலாதவர்கள் அஞ்சலிலோ, மின்னஞ்சலிலோ கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள். நன்றி.

கருந்திணை
1/810 முத்தமிழ் நகர், அடியனூத்து-அஞ்சல், திண்டுக்கல் - 624 003
- karunthinai@gmail.com

Monday, February 8, 2010

கருந்திணை

பல ஆயிரம் வருடங்களாக மாறாமல் அழுகிக் கிடந்த ஒரு சமுதாயப் போக்கை முற்றிலும் அழித்து தரைமட்டமாக்கி புதிதாக சிறப்பாக கட்டியமைக்கப் போராடியவர் பெரியார். திருமணம், பிள்ளைப்பேறு, குழந்தை வளர்ப்பு, காதல், உணவு முறை, கல்வி, விவசாயம், அரசியல், பொருளாதாரம், சொத்துரிமை, குடும்ப அமைப்பு ஆகிய அனைத்தைப் பற்றியும் ஒரு அறிவியல்பூர்வமான பார்வையைச் செலுத்தி ஆய்வுகளை நடத்தி முடிவுகளைக் கண்டுபிடித்து அந்த ஆய்வின் முடிவுகளை தன் காலத்திலேயே நடை முறைப்படுத்தி சமுதாயத்தை வளர்ச்சிநோக்கில் மாற்றியவர் பெரியார்.


1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டு அழைப்பில், “தனிப்பட்ட பெண்களும், தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வர வேண்டும்” என அழைப்பு விடுக்கிறார்.

1929 லேயே ”இன்பத்திற்காக கல்யாணம் என்றால் அதற்கேற்றமுறையில் கல்யாணத்திட்டம் அமைக்கப்பட வேண்டுமே ஒழிய மற்றப்படி இன்பமும் காதலும் அல்லாமல் வெறும் உலகத்தை நடத்துவதற்கும் உலக விருத்திக்கு என்று புலபுலென பிள்ளைகளைப் பெறுவதற்கும் ஆண்மக்களுக்கு அவனது வாழ்வுக்கும் கீர்த்திக்கும் திருப்திக்கும் நிபந்தனையற்ற நிரந்தர அடிமையாகப் பெண் இருப்பதற்கும் தான் கல்யாணம் என்பதானால், அம்மாதிரி கல்யாண வாழ்க்கையில் நமது பெண் மக்கள் ஈடுபடுவதை விடக் கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வதையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்” என பெண்கள் தனித்து வாழ்வதை ஆதரித்து எழுதுகிறார்.

திருமணங்களைப் பற்றி மிகக்கூர்மையாக “சம சுதந்திரத்தில் இயற்கை உணர்ச்சியில் சமசந்தர்ப்பம் அளிக்கப் படாத முறையைக் கொண்ட கல்யாணங்களை நாம் விபசார வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டியிருக் கிறது”என்றார்.

“ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கு ‘திருமணம்’ என்ற ஏற்பாடுதான் நிரந்தரமானது என்று கருத வேண்டிய தில்லை. உலக விஷயங்கள் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுவது போல திருமண முறையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது திருமண முறையே மறைந்து போகக்கூடும்” என்று குடி அரசில் எழுதுகிறார்.

1930 இல் “பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாக இருப்பதால் சாதாரணமாகப் பெண்கள் பிள்ளை பெறுவதையே அடியோடு நிறுத்திவிட வேண்டும்” என குடி அரசில் எழுதியுள்ளார்.

“ஒருவன் தான் இறந்தபிறகு தன் பெயரைச் சொல்லி தனக்காக கருமம் செய்ய பிள்ளையைப் பெற்றுவிட்டுச் செல்வது அவசியம் என்றும் பிள்ளைப் பேறு இல்லாதவர்களால் மோட்ச லோகத்துக்கும் போக இயலாது என்றும் கூறி பிள்ளைப் பேற்றை மிகவும் அவசியமாக்கிவிட்டனர். லௌகீகத்திற்காக சொத்துரிமைக்காக ஒரு பிள்ளை பெறுவது அவசியமாகக் காட்டப்பட்டதைவிட - வைதீகத்திற்காக, தனக்கென்று பார்ப்பனனிடம் அரிசி பருப்பு அழ ஒரு பிள்ளை பெற வேண்டிய அவசியம் அதிகமாக வற்புறுத்தப்பட்டது”

குழந்தைப் பேறு இல்லாமல் போனால் நரகத்தில்தான் இடம் கிடைக்கும் என்பதால் ஒருவன் தனது மனைவி மற்றொருவனுடன்கூடி பிள்ளை பெற்றுக்கொள்வதையும்கூட ஏற்றுக்கொண்டிருந்த காலத்தில், அதற்கென சில சாஸ்திரங்களைக்கூட உருவாக்கி வைத்திருந்த சமுதாயத்தில் “ பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட வேண்டும்” எனப் போர்க்குரல் எழுப்புகிறார்.

5 வயதிலும் 6 வயதிலும் ஆயிரக்கணக்கான விதவைகள் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில், 4 அல்லது 5 வயதிலேயே பெண்களுக்கு திருமணத்தை நடத்திவிடும் சமுதாயத்தில் பெண்கள் தனித்து வாழ்வதை வலியுறுத்தி கலகக்குரல் எழுப்புகிறார்.

1929 லேயே பெரியார் தனது இல்லத்தில் பெண்களுக்கான ஒரு முறைசாரா அமைப்பொன்றை ஏற்படுத்தி யிருந்ததார். பெண்கள் தங்கள் சொந்தப் பிரச்சனைகள், சமூகப்பிரச்சனைகள் ஆகியவற்றை விவாதிப்பதற்காக அவரைச் சந்திக்க வந்து கொண்டிருந்தனர். 1935 இல் வீட்டை விட்டு வெளியேறிய அநாதரவான பெண்களுக்கு பெரியார் ஒரு விடுதியையும் நடத்தி வந்தார்.
15.05.1935 அன்று பெரியார் தலைமையில் நீலாவதி அம்மையார், அ.இராகவன் போன்றோர் பங்கேற்று நடை பெற்ற கூட்டத்தில் ‘தமிழ்நாடு பெண்கள் முன்னேற்ற சபை’ என்ற அமைப்பை ஏற்படுத்துவது என்றும் அதன் சார்பில் பெண்கள் நிலையமும், குழந்தைகள் பராமரிப்பு மையமும் ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

“குடும்ப எல்லைகளைக் கடந்தும், சமுதாயம் பெண்களுக்கென்றே விதித்துள்ள பாத்திரங்களை மறுத்தும் சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் வாழ விரும்பிய பெண்களுக்கான ஒரு இடமாக பெண்கள் நிலையம் என்பது சிந்திக்கப்பட்டது.” காதல்திருமணம், கலப்புத் திருமணத்தைப் பிரச்சாரம் செய்தலும் ஊக்குவித்தலும் பெண்கள் நிலையத்தின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த பெண்கள் நிலையம் ஏட்டளவுக்குத்தான் இருந்தது. பெரியாரின் கனவாக இருந்தது. உருவாகவில்லை.

புரட்சிகரமான பெரியார் கருத்தியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச்செல்லத் துடித்த ஆயிரக்கணக் கான போராளிகள் முதலில் தத்தம் வாழ்க்கையிலும் அவற்றை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள், தாலி சடங்குகள் மறுப்புத் திருமணங்கள், மறுமணங் கள், தாசிகளைத் திருமணம் செய்தல், குழந்தைகளோடு இருக்கும் பெண்களைத் திருமணம் செய்தல், தனித்து வாழ்தல், பிள்ளைபெற்றுக்கொள்ளாமல் வாழ்தல் என பல்வேறு முற்போக்கு வாழ்வியல் முறைகளுக்கு பெரியார் இயக்கம் ஒரு அங்கீகாரத்தை வழங்கியது.

அந்த சுயமரியாதைக் காலம் அதே வீச்சில் தொடராமல் போய்விட்டது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெரியார் தொண்டர்கள்கூட தமது இறுதிக்காலங்களில் இருவரில் ஏதோ ஒருவரது ஜாதிக்காரர்களுடன் அனுசரித்துப் போக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கணவன் ஜாதியோடு அனுசரிப்பது என்றால் மனைவியின் சுயமரியாதை யும், மனைவியின் ஜாதியாரோடு அனுசரிப்பதென்றால் கணவனின் சுயமரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அந்த ஜாதி மறுப்பு இணையர்களுடைய வாரிசுகளின் திருமணத்தின் போதும் சிக்கல் வருகிறது. அதைக் காரணங் காட்டி ஜாதிமறுப்புத் திருமணங்களே தடுக்கப்படுகிறது.

‘கடைசிக்காலத்தில் சொந்த ஜாதிக்காரனின் தயவு வேண்டும்’ என்பதற்காக வாழ்நாளெல்லாம் தாம் பேசிவந்த கருத்துக்களுக்கு மாற்றான காரியங்களைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பெரியார் தொண்டர்கள் ஆளாகி றார்கள். பெரியார் இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றும் தோழர்கள்கூட தமது வாரிசுகளின் எதிர்காலத்தை எண்ணி பயந்து தம் இல்லங்களில் காதுகுத்து, கருமாதி, பூப்புனிதநீராட்டுவிழா, தாய்மாமன் சீர், பங்காளிச்சீர், மொய் முறைகளை செய்திட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.

‘கடைசிக்காலத்தில் தண்ணி மோண்டு குடுக்கவாவது ஒரு பிள்ளை வேண்டும்’ என்ற சமுதாய மிரட்டலுக்குப் பயந்து பிள்ளைபெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

திருமணம் வேண்டாம் என்று தனித்து வாழும் ஆண்களும் பெண்களும் சமுதாயத்தால் மிகக்கடுமையாக கேவலப்படுத்தப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள்.

கணவனை இழந்த பெண்கள், திருமண முறிவு ஆன பெண்கள் தமது சுயமரியாதையை சுதந்திரத்தை முற்றிலும் இழந்து வாழ்கிறார்கள்.

எண்ணற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் தமது இறுதிக்காலத்தில் உணவின்றி, மருத்துவம் இன்றி, கவனிப் பாரற்று மறைந்துள்ளனர். இறுதிக்காலங்களில் கொள்கைக்காகப் பணி யாற்ற முடியாமலும் தன் வாழ்க்கையில்கூட கொள்கையைப் பின்பற்ற முடியாமலும் மனம் வெந்து மறைந்துள்ளனர்.

மேலத்தஞ்சை பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்களின் விடியலுக்காக உழைத்த திருமங்கலக்குடி கோவிந்தராசன் அவர்களின் மறைவு நாளில் ஒரு கருப்புச்சட்டைகூட உடன் இல்லை.

1958 இல் பெரியாருக்கு கடுங்காவல் தண்டணை வழங்கப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த பார்ப்பனர் மீது ஆசிட் அடித்து கத்தியாலும் குத்திய போராளி - பெரியார் படத்தை செருப்பால் அடிக்க முயன்ற விபூதி வீரமுத்தின் மண்டையை உடைத்த தோழன் - வெளிப்படையாக இயங்காமல் பெரியாரின் தற்கொலைப்படை யாகவே வாழ்ந்த தோழர் ஆசிட் தியாகராசன் இப்போது ஆந்திரா எல்லையில் உள்ள தடா என்ற கிராமத்தில் தேவாலயம் ஒன்றில் மணி அடித்து ஊழியராகப் பணியாற்றி காலத்தைக் கடத்துகிறார்.

ஆசிட் தியாகராசனின் மிக நெருங்கிய தோழர். அவரது அனைத்து செயல்களிலும் தோளோடு தோள் நின்று பணியாற்றிய தோழர் சின்னச்சாமி தஞ்சை அரசு மருத்துவமனையில் 1000 ரூபாய் பணமில்லாமல் மருந்து வாங்கமுடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.

அந்த தோழர் சின்னச்சாமியின் துணைவியார் இருமாதங்களுக்கு முன்பு பெரியாரின் வாரிசுப் பட்டத்தை தூக்கிச் சுமக்கும் வேந்தரை, தமிழர் தலைவரை நேரில் காணச் சென்றார். ஏன் உள்ளே வந்தாய்? யார் இவரை உள்ளே விட்டது? என விரட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தக் கொடுமையைச் சொல்லி அழக்கூட ஆளில்லாத அவருக்கு ஆசிட் தியாகராசன் சென்றுதான் ஆறுதல் வழங்கி வந்திருக்கிறார்.

திருச்சியில் 1957 சட்டஎரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றதால் தான் நடத்தி வந்த உணவுவிடுதி தொழிலை முழுமையாக இழந்த தோழர் மாரியப்பன் இன்றும் அதே திருச்சியில் கழிவறையை சுத்தம் செய்து அந்த வருமானத்தில் அதே கழிவறையில் வசித்து வருகிறார்.

இதுபோன்ற மோசமான மறுபக்கங்களின் பட்டியல் நீளமானது. இவையெல்லாம் பெரியாரியலை ஏற்றுக் கொண்டு உழைத்த தோழர்கள் சிலரின் நிலை. இந்த நிலையை மாற்ற வேண்டும். முதலில் பெரியார் கருத்துக்களை பின்பற்றுபவர்களுக்காவது ஒரு பாதுகாப்பு அரண் தேவை.

ஒரு இந்து கடைசிவரை இந்துவாகவே வாழமுடிகிறது. தனது வாரிசுகளை இந்துவாகவே உருவாக்க முடிகிறது. ஒரு கிறிஸ்துவராலும், இஸ்லாமியராலும் தனது மதத்தை இறுதிவரைப் பின்பற்ற முடிகிறது. ஆனால் ஒரு பெரியாரியல்வாதி இறுதிக்காலங்களில் இந்துவாக ஜாதிக்காரனாக மாறவேண்டிய அவலம் உள்ளது.

ஒரு ஆரியன் தான் தனது பண்பாட்டைக் கட்டிக்காப்பது மட்டுமல்லாமல் நமது திராவிடர் பேரினத்தையும் அவனது ஆரியப் பண்பாட்டை பின்பற்றச் செய்து விட்டான். அந்த ஆரியத்துக்கு எதிரான களத்தில் நிற்கும் பெரியார் தொண்டர்களாவது தமது வாழ்விலாவது ஆரியத்துக்கு எதிரான அறிவியல் பண்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கி.பி. 1925 முதல் 1938 வரையிலான சுயமரியாதைக் காலம் அதே வேகத்தில் அதே பார்வையில் அதே வீச்சில் மீண்டும் உருவாக வேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என திணை வழிப்பட்ட பண்பாடுகளை அறிந்த தமிழினம் - தான் அவசியம் பின்பற்றியிருக்க வேண்டிய பண்பாடான சுயமரியாதைக்காலப் பண்பாட்டை மீண்டும் கையிலெடுக்க வேண்டும் என்ற பேராவலில் ஒருங்கிணைந்த தோழர்களின் கூடல்தான் கருந்திணை.

முதுபெரும் பெரியார் தொண்டர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது இறுதிக்காலம் வரை கொள்கைப்படி வாழ்வதற்கும் அவர்களது விருப்பத்திற்கேற்ப கொள்கைப்பிரச்சாரத்திற்கு அவர்களைப் பயன் படுத்துவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தனித்து வாழ விரும்பும் ஆண்கள், தனித்து வாழ விரும்பும் பெண்கள், மணமுறிவுக்குப் பிறகோ அல்லது துணையை இழந்ததற்குப் பிறகோ மறுமணம் வேண்டாம் என வாழும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் இறுதிவரை சுதந்திரத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ பாதுகாப்பான இடம் வேண்டும்.

ஜாதி, மத, தாலி மறுப்பு இணையர்கள், விதவை மணம் புரிந்தோர், மறுமணம் புரிந்தோர் இறுதிவரை கொள்கை வழிப்படி வாழ வேண்டும்.

மேற்கண்ட அனைத்துப்பிரிவினரும் ஒன்றாகக் கூடி வாழ ஓர் இடம் வேண்டும். அதை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் அடி எடுத்து வைக்கும் நோக்கில் திண்டுக்கல்லில் அறிவியல் வாழ்வியல் இல்லமாக முதல் கருந்திணை விடுதியை உருவாக்க உள்ளோம். திண்டுக்கல்லிருந்து தேனி செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ள கும்மம்பட்டி என்ற கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு மாந்தோப்பில் அது உருவாக உள்ளது. கருந்திணை விடுதிக்கான முதல் ஆலோசனைக் கூட்டம் 09.01.2010 அன்று திண்டுக்கல்லில் நடை பெற்றது. 29.01.2010 அன்று கருந்திணை என்ற பெயரில் திண்டுக்கல்லில் ஒரு அறக்கட்டளையும் பதிவு செய்யப்பட்டு விட்டது. எந்த ஒரு இயக்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் பெரியார் தொண்டர்களுக்கான பொது வான இல்லமாக கருந்திணை இயங்கும். இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் காதலர் தினமான 14.02.2010 அன்று செம்பட்டியில் நடைபெறும். எமது இந்த முயற்சி குறித்த உங்களது கருத்துக்களையும், முயற்சி சரியானது என்றால் ஆதரவையும், உதவியையும், ஒத்துழைப்பையும் வழங்குங்கள்.

முகவரி : கருந்திணை, 1 / 810 முத்தமிழ் நகர், அடியனூத்து. அஞ்சல், திண்டுக்கல் . 624003
மின்னஞ்சல் : karunthinai@gmail.com

Monday, September 21, 2009

பார்ப்பான் - தமிழனாக்கப்படும் ஆபத்து!

பெரியார் பணி முடிப்போம் இல்லை இல்லை காப்போம்


பெரியாரின் பிறந்தநாளான்று பெரியார் அதைச் செய்தார் இதைச் செய்தார் எனவே எல்லோரும் ஈரோட்டுக் கண்ணாடிமாட்டுங்கள் என வழக்கம் போல்சொல்ல வரவில்லை

”எனக்குத் தகுதி உள்ளதோ இல்லையோ யாரும் முன் வராததால் நானே என் தோளில் போட்டுக்கொள்கிறேன்”எனக் கூறி சமூகப்பணிசெய்யப் புறப்பட்டார்.

அன்று ஒரு பெரியார் இன்று எத்தனையோ பெரியார் தொண்டர்கள்.அமைப்பாகவும் தனி மனிதரகவும் எண்ணிக்கையில் அதிகம்.நாம் பெரியாரியலை எவ்வளவுதூரம் நகர்த்த பயன்பட்டுள்ளோம்என்பதை சுய ஆய்வு செய்வதுதான் நாம் எடுத்து வைக்கும் அடி சரியானதா இல்லையா? அதாவது பெரியாரியலைச் சொல்லிக்கொண்டு வேறு மயக்கத்தில் உள்ளோமா இல்லையா என்பது தெளிவாகும்.

இதை எழுதுவதன் நோக்கம் அவர் சரி இவர் சரியில்லை என்றெல்லாம் பேச அல்ல.மாறாக இச்சமூகம் சந்தித்து வரும் ஒவ்வொரு இடியாப்பச் சிக்கலையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை சுய விமர்சனமாகப்பார்க்கவே இதை த் தொடங்குகிறேன்.

தற்போது நடந்தேறியுள்ள யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத நம் இன அழிப்பு இட்லருகும் முசோலினிக்கும் பாடம் நடத்தும் தகுதியை ராஜபக்சேவுக்குக் கொடுத்துவிட்டது.இந்த இன அழிப்பு நிகழ்ந்தபோது எத்தனைத் துடிப்புகளைக் காட்டியும் தடுக்க இயலாமல் தவித்த உண்மையானதலைவர்கள் ,நேர்மையாளர்கள் அதன் பின் இனி அடுத்து நம் கடமை என்ன என்பதை முடிவு செய்து தன்னாலான வேலையைச் செய்யத்தொடங்கிவிட்டனர்.(ஈழம்- நாம் இனி செய்ய வேண்டியது என்ன?-தோழர் கொளத்தூர்.மணி)

அதேசமயம் தற்போது தமிழின அழிப்பிற்கு காரணம் தமிழினத்ட் துரோகமே என மெல்லப் பரப்பப்ட்டு வருகிறது, உண்மைதானா?
நடந்து முடிந்த் நிகழ்வுகளில் படித்த செய்திகளிலும் பெரும்பாலும் நம் கண் முன் நிறுத்தப் படுவது துரோகமே.(நக்கீரன் - ஜெகத் கஸ்பர் கட்டுரையில் பெரும்பாலும் அதுவெ முனிறுத்தப்படுகிறது)நிகழ்வுகளும் உண்மையாய் இருக்கலாம்,அப்படியானால்?…. இதை முன்னிறுத்தும் சக்த்திகள் கூறுவதுபடி தமிழந்துரோகத்தால் அழிந்த்து போனானே ஒழிய அழிக்கப்படவில்லை என்பது உண்மையா?

மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.ஆனால் இந்த உனர்ச்சி வயப்பட்ட முடிவு மாபெறும் ஆபத்தை உள்ளடக்கியுள்ளது.என்ன ஆபத்து?

வேறொன்றுமில்லை பார்ப்பான் - தமிழனாக்கப்படும் ஆபத்து.பார்ப்பான் திருந்தி நேர்மையாகத் தன்னை மாற்ரி தமிழனாவது அதாவது இச்ச்மூகத்தொடுகலப்பது என்பது வேறு(நல்ல கற்பனை).

மாறாக தமிழகச் சிக்கல்களைப் பார்ப்பானோடு அய்க்கியமாக்கிப் பார்ப்பானைத் தமிழனாக்குகிற முயற்சி ஆபத்தானதே.

ஆம்,தமிழின அழிப்பு நிகழ்ந்தபோது அதன் பின்னனியை மக்களுக்குக் கொண்டு செல்லாமலும்,அப்படிக் கொண்டு சென்றவர்களும் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது.பெரியார் திராவிடர் கழகமெடுத்த தேர்தல் நிலைப்பாட்டிற்கும், மற்ற சக்திகள் நிலைப்பாடு எடுத்ததற்கும் அடிப்படை வேறுபாடு நிறைய உண்டு.இன அழிப்பை நிகழ்த்துவது இந்திய மய்ய அரசின் அதிகார மய்யமும் காங்கிரசின் தலைமையும் என்ற அடிப்படையில் கவனமாக எடுத்து வைக்கபட்ட நிலைப்பாடு.வேறு வழியே இல்லை காப்பாற்ற வேண்டிய கரங்கள் தொடர்ந்து தடை போடுகிறது.பெ.தி.க.கடுமையாக ஒடுக்கப்படுகிறது.ஏராளமான தோழ்ர்கள் சிறையில்.தலைவர் தே.பா.சட்டத்தில் கைதாகி விடுதலை செய்யப்படுகிறார் அடுத்தப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் கைதாகி உள்ளே செல்கிறார்.இன்னொரு பொதுச்செயலாளர் சோனியாவின் வ்ருகைக்காக உள்ளே தள்ளப்படுகிறார்.கைது செய்யப்பட்டதற்கோ தோழர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காகவோ எள்ளளவும் எதிர் நிலை எடுக்கப்படவில்லை,தன் ஆட்சியைக் காக்கவேண்டி ப்ன்னனியை திருப்திப்படுத்தவேண்டி இப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்ததற்குகூட கவலை இல்லை.மாறாக,போராட்டம் நடத்தி மய்ய அரசு இன அழிப்பு நிகழ்த்துவதற்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்கிற அவசர செயல்கள்தடுக்கப்பட்டபோதுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் மற்ற சக்திகள் இதே சிக்கலில் தங்களது குரலை கவனமாகப் ப்திவு செய்தன.ஏழ் வுடுதலைக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கையை ஒரு அரசியல் கட்சியின் அபிலாசைஎனும் கோணத்தில் கொண்டு சென்றன.உண்மையில் அது வெறும் ஓட்டுக்காண தந்திரமாகத்தான்பட்டது.ஆதரவு சக்திகளாகப் புறப்பட்ட சக்த்திகளின் ஆதரவில் இருந்த ஆபத்து:

1) அவர்கள் தீர்வாக ஈழ்த்தை ஒருபோதும் சொல்லவில்லை.

2) ஈழவிடுதலை என்பது இந்திய மேலாண்மைக்கு விடப்படும் சவால் என்பதே மய்யாதிகாரமய்யத்தின்(பார்ப்பன) எப்போதும் மாறாத நிலை.எனவே எக்காரணம் கொண்டும் ஈழ் விடுதலையை இந்தியப் பார்ப்பன அரசு அனுமதிக்கவே அனுமதிக்காது.எனவே பார்ப்பன அதிகார மய்யம் எதிர்க்கப்படாமல் அதன் நடவடிக்கையின் பின்னனி வெட்ட வெளிச்சம் ஆக்காமல் அதேசமயம் இதற்குப் பாற்ப்பனப் பின்னனியை ஆதரவுக்கு அழைத்தது( பார்ப்பனச்சங்கம் இலங்கைத்தமிழ்ர் ஆதரவு என்ற நிலைப்பாடு)போன்றவை.

3) பார்ப்பன பாரதியைப் புகழ்ந்துகொண்டே திராவிடர்,திராவிட பத எதிர்ப்பை முன்னிறுத்தும் சீமானின் ஈழவிடுதலை ஆதரவு.

4) மறைந்த இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்தில் அதை எதிர்த்த எல்லோரும் கடுமயாக சிறைக்குள்சித்திரவதை அடைந்தனர்.ஆனால் அதே அளவு எதிர்ப்பை முன் வைத்த ‘சோ’ என்கிறைரட்டை நாக்குப் பார்ப்பான் எந்தவொரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் அதே சமயம் நெருக்கடியை எதிர்த்த வீரனாக வலம் வந்தான்.

அதே போல பெ.தி.க.த் தொண்டர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட வேளையில் தே.பாதுகாப்புச் சட்டமும் வழக்குமாக அலைந்து கொண்டு இருந்த நேரத்தில் நெருக்கடியையே சந்திக்காத மற்ற சக்திகள் பார்ப்பன இந்து சனாதானிகளின் ஆதரவைத்திரட்டின.அவர்களும் தந்தனர்.இந்திய தேசியத்தில்தான் சிக்கல் என்பதை உரத்துச் சொல்ல வழி இல்லாமல் அகண்ட பாரதம் காக்கும் இந்துத்வாவாதிகளிடம் கை கோர்த்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய நிகழ்வு.

இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால் ஈழச்சிக்கல் பார்ப்பனஆதரவோடு ,அவர்களோடு கலந்து எதிர் கொள்ளும்போதே பார்ப்பனச் சிக்கலைஅதாவது இங்குள்ள மற்றும் ஈழச்சிக்கலில் யார் எதிரியோ அதை அதாவதுப் பார்ப்பன- அதிகார மய்யத்தை ந்ம் கண்ணுக்கு மறைத்து தமிழர் சிக்கல்களை பார்ப்பன அமைப்புகளிடம் ச்மரசமாகத் தாரை வார்ப்பத்ற்கான முன்னோட்டம்தான் இது.
மலேசியாவில் தமிழர் சிக்கல் எப்படி இந்திய,இந்துச் சிக்கலாயிற்று என்பதற்கான வரலாறு நமக்குத் தெரியவில்லை என்றாலும் அதற்கான வழி என்ன என்பதை எந்நிகழ்வுகள் நமக்குக் காட்டுகிண்றன.

அதனால்தான் பார்ப்பனச் சிக்கல்தான் ஈழவிடுதலையின் தடைக்கல் என்பதையே சொல்லாமல் தமிழினத் துரோகம்தான் எனக் கூறுவதன் பின்னனி இதுதான்.

இந்தியவின் இருக்கமான மௌனம்தான் ஈழ் இன அழிப்பின் பின்னனி என்பதுதானெ உண்மை.மய்ய அதிகாரத்திற்கு நெருக்கடி ஏற்ப்டுத்தும் பார்ப்பன எதிர்ப்பு,இட ஒதுக்கீடு போன்றவறை எப்போதுமே ஒழுங்காகக் கூறாமல் எங்களுக்கும் அந்தக் கொள்கை உண்டு எனக் காட்டி அதே சமயம் பார்ப்பன எதிர்ப்பை உருக்குலைக்கும் வேலையைச் செய்து கொண்டு தமிழினத்துரோகம் என்ற பதத்தால் இவற்றை மறைக்கும் நிகழ்வுகள்தான் அரங்கேறி வருகின்றன.
இது போன்ற மாய வலைகளில் நம் பெரியார் தொண்டர்கள் தங்களை இழந்து பார்ப்பன் எதிர்ப்பைக் குறைத்து வெறும் தமிழினத் துரோகிகள் எதிர்ப்பு எனும் நிலை எடுத்தால் அது பார்ப்பன ஆதிக்கச் சக்திக்கு ஆதரவாகப் போய்விடும் என்பதோடு கொதிக்கிற எண்ணைச் ச்ட்டியிலிருஎது எரிகிற அடுப்பில்வீழ்ந்த கதைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தோழர்களே! என் மனதுக்குப் ப்ட்டதை எழுதித் தொடங்கியுள்ளேன். இதை விமர்சனத்துக்கு உட்ப் ப்டுத்தி மற்றதோழர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.!!!!


மௌ.அர.சவகர்,
பழனி.

Wednesday, June 17, 2009

ஈழப்போரின் உயரிய தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் ம.க.இ.கவின் பார்ப்பனஇரட்டை நாக்கும், வெளுத்துப் போன மூக்கும் - 1

ஈழப்போர்-2009, தமிழ்த் தேசிய இன விடுதலையின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஒரு பெரும் பின்னடைவு. தமிழீழ மண்ணை சுடுகாடாக்கிவிட்ட சிங்களப் பேரினவாத போர்வெறி ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் ஒரு சவாலை விதைத்திருக்கின்றது. உண்மையில், இயக்குநர் சீமான் சொன்னது போல, ஒவ்வொரு மானமுள்ள தமிழனையும் விடுதலைப்புலியாக்கிவிட்டது இந்த ஈழப்போர். தமிழீழத்தின், ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒரு ஒப்பற்ற போர்ச்சின்னம், போர்முழக்கம் பிரபாகரன். தமிழ் மண் கண்ட போர் வரலாற்றில் பிரபாகரன் சிகரம் தொட்ட நாயகன். உண்மை, வெறும் புகழ்ச்சியன்று.

அவர் ஆற்றிய போர் வெற்றிகள், அவர் விரிவுபடுத்திய படை அமைப்பு விண்ணையும் மண்ணையும் கடலையும் பரவி நின்றது. அது அவருக்கு ஒரு மாவீரன் என்ற புகழைத் தந்தது. நாயகன் ஆவதற்காக யாரும் போராடுவதில்லை. போராட்டங்கள் தான் ஒரு போராளியை நாயகனாக உயர்த்துகின்றன. மாவீரர்கள் செய்யப்படுவதில்லை, உருவாகிறார்கள். புலிகளின் அரசாட்சி முறை நியாயம் படைத்தாக, ஒழுங்கும் அறமும் கொண்டதாக இருந்திருக்கின்றது. தற்போது நடந்த உச்சக்கட்ட போரில் இலட்சக்கணக்கான மக்கள் புலிகளைச் சுற்றிக்கொண்டு கேடயமாக நின்றது அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் தழுவிய அரசியலாக்கியிருப் பதற்கான ஆதாரம்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றிய சரியான புரிதல் எல்லோருக்கும் அவசியம். புலிகள் ஜனநாயக சக்திகளை அழித்துவிட்டார்கள் என்று கதையளப்பதில் எந்தப் பொருளும் இல்லை. இந்திய ‘ரா’ உளவுத்துறை மற்றும் இராணுவத்தின் இடைவிடாத கடுமையான தலையீட்டால் போராளிக் குழுக்களுக்குள்ளேயே பிரிவினை ஏற்படுத்தப்பட்டது; ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் அபாயம் உண்டானது; அந்தச் சூழலில், களத்தில் நின்று போராடக்கூடிய ஒரு ஆயுதக் குழு எடுக்கும் முடிவை வெட்டியாக நாற்காலி மேசை போட்டு கருத்துக் கூறவிட முடியாது. ஏனெனில் அப்படிப்பட்ட போர்க்குழுக்களை வளர்த்தெடுத்ததே ‘ரா’வும் இந்திய இராணுவமும் தான். எனில் அவற்றின் ஆதிக்கம் அத்தகு குழுக்களுக்குள் எந்த அளவிற்கு ஊடுருவியிருக்கும் என்பதை யாரும் அவ்வளவு எளிதில் கற்பனை செய்துபார்க்க முடியாது. நரம்பும் சதையுமாக இருந்த மாத்தையாவே விலைபோன துரோகக் கதையது. ஒரே குரல் ஒலிக்கவேண்டும் என்பதும், அதிகாரம் குவிக்கப்படவேண்டும் என்பதும் இத்தகு சூழலில் களத்தில் நின்று போராடக்கூடிய ஒரு போர்க்குழுவின் அவசியம். போட்டி நிலவும் பல்வேறு போர்குழுக்களுக்குள் ஒரு திறமையான போர்க்குழு முன்னெழ பல போர்த் தந்திரங்களும், செயல் தந்திரங்களும் செய்யவேண்டியிருக்கும். புலிகள் மாற்று ஜனநாயக சக்திகள் இயங்குவதற்கான ஒரு வெளியை ஏற்படுத்தவில்லை என்பதும் தவறு.

அன்றைய சூழலில் தமிழர்களின் ஒரே குரலும், இராணுவரீதியான வெற்றியும் தேவைப்பட்டது. தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் எல்லோரும் வெவ்வேறு போர்க்குழுக்களிலும், மாற்று ஜனநாயக் சக்திகளாக இருந்தவர்களும் தான். புலிகளின் ஆதரவு சக்திகளை அவர்கள் என்றுமே பாதுகாத்திருந் திருக்கிறார்கள். மாற்று ஜனநாயக் சக்தி என்ற போர்வையில் தமிழீழத்தில் குழப்பங்களை உருவாக்க நினைப்பவர்களையும், தமிழர்களை ஒரே குடையின் கீழ் சேர்க்கவிடாமல் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்களையும் தான் புலிகள் அழித்திருக்கிறார்கள். அது களத்தின் தேவை. வசதியாக ஒரு அறையில் உட்கார்ந்துகொண்டு பேனா பேப்பர் கிடைக்கிறது என்பதற்காக என்ன வசை வேண்டுமானாலும் பாடலாம் என்றால் ஸ்டாலினும் ஒரு மக்களினப் படுகொலைக்காரர் தான்; தனது சகாக்களையே உளவுத்துறையை ஏவி சுட்டுக்கொன்ற ஸ்டாலினும் ஒரு சர்வாதிகாரி. சோவியத் ரசியாவிற்குப் பயணம் சென்ற பெரியார் டிராட்ஸ்கியவாதிகளை சந்திக்க முயன்ற போது ஸ்டாலின் பெரியாரை நாட்டைவிட்டு உடனே வெளியேற்றினார். ஸ்டாலின் ஒரு ஜனநாயகவாதியாம்! ஸ்டாலின் எந்த வகையில் ஜனநாயகவாதி என்று கொக்கரிக்கிறார்களோ அதே அளவுகோல் கொண்டுதான் புலிகளையும் அளந்து பார்க்கவேண்டும்.

‘ஸ்டாலின் ஒரு சகாப்தம்’ என்ற குறுந்தகடில் ம.க.இ.க, ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி பூஜை செய்யவில்லை என்ற ஒரு குறையைத் தவிர எல்லா வகையிலும் தனிநபர் வழிபாடு செய்கின்றது. என்னப்பா, உங்கள் கணக்குப்படி ஸ்டாலினுக்கு ஒரு நியாயம், பிரபாகரனுக்கு ஒரு நியாயமா?

அந்தக் குறுந்தகட்டில், ஸ்டாலின் மீது சுமத்தப்பட்ட எல்லா குற்றங்களையும், ஜனநாயகப்படி, கூறி அதை விளக்கி மறுப்பு சொல்லியிருந்தால் அது ஜனநாயக விமர்சனம். அப்படி எதுவுமே அதில் இல்லையே. அவை எல்லா வற்றையும் உங்கள் பார்வையாளர்களிடமிருந்தும், சக தோழர்களிடமிருந்தும் மறைத்துவிட்டீர்கள்.

முன்பொரு முறை அருந்ததிராய் எழுதிய கட்டுரையின் மொழி பெயர்ப்பை முழுவதுமாக வெளியிடாமல் ஸ்டாலின் பற்றிய விமர்சனங்களுக்கு சென்சார் விதித்த ம.க.இ.கவின் ஜனநாயக யோக்கியதை எல்லோருக்கும் தெரிந்ததே. புதிய ஜனநாயகமாம் அது. ஏனிந்த இரட்டை நாக்கு?

ஸ்டாலின் தன் மக்களையே, ‘லேபர் கேம்புகளில்’ போட்டு சித்திரவதை செய்து மில்லியன் கணக்கில் கொன்றார். ஆனால், பிரபாகரன் அப்படியெதுவும் செய்யவில்லையே. தனது மக்களுக்காக தங்களைக் களப்பலியாக்கிக்கொண்டு சயனைடு குப்பிகளோடு திரிபவர்கள் அல்லவா புலிகள். தனது சொந்த மகனையே களப்பலி கொடுத்த வீரம் யாருக்கு இருக்கிறது? முதலாளித்துவ சக்திகள் ஸ்டாலின் இருக்கும்போதே எல்லா விமர்சனங்களும் செய்தன, இறந்த பின்னும் சேற்றை வாரியிறைத்தன. இன்று ம.க.இ.க, புலிகள் போராடிக் கொண்டிருக்கும் போதும் இப்பொழுது தோல்வியை சந்தித்தவுடனும் இதே விமர்சனம் செய்கின்றனது. ம.க.இ.கவிற்கும் முதலாளித்துவ சக்திகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஒற்றுமை என்னவென்றால், காழ்ப்புணர்வு, வெறுப்பு. இது தமிழின தேசிய எழுச்சியின் மீதான வெறுப்பு. பூணூலிஸ்டுகள் புலிகள் மீது சேற்றை வாரியிறைப்பதில் எந்த வியப்பும் இல்லையே. இங்கே என்ன விசேசம் என்றால், ம.க.இ.க தன்னை பூணூலிஸ்டு என்று அடையாளம் காட்டியிருக்கிறது. இதனை பல்வேறு கேள்விகள், கட்டுரைகள் மூலம் ‘கருந்திணை’ ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்பொழுதும் அதன் இரட்டை நாக்கை அம்பலப்படுத்தியுள்ளது. புலிகளின் கொடியை சிங்களர்கள் அவமானப்படுத்தும் புகைப்படத்தைப் போட்டு புதிய ஜனநாயகமும் பூரிப்பு அடைகின்றது. பிரபாகரன் தனது சகாக்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் போட்டு, தனிநபர் வழிபாடு, சந்தர்ப்பவாதம் என்றும் அர்ச்சனை செய்திருக்கின்றது. இதில் எந்த உண்மையும் இல்லை. நான்குபேர் இருக்கும் ஒரு புகைப்படத்தை அச்சிட்டு என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றால், யாரும் புகைப்படமே எடுத்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். சரி, அப்படி விமர்சிப்பதானால், நாமும் விமர்சிப்போம், சர்ச்சிலோடும், உட்ரோ வில்சனோடும், ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் பற்றி; அப்பட்டமான சமரசவாத சந்தர்ப்பவாத மோசடி என்று; உலக நாடுகளை கூட்டுக்கொள்ளையடிக்க போடப்பட்ட ஊழல் கூட்டணி என்று. இது முழுக்க முழுக்க உண்மை. கோவப்படாதீக மக்கா! கிழக்கு ஜெர்மனி மற்றும் பெர்லின் சுவர்பற்றி அய்ரோப்பிய வரலாற்றைப் படியுங்கள். வெறுமனே, ம.க.இ.க காட்டும் சென்சார் விசயங்களை மட்டும் பார்த்துப் படித்து ஏமாந்துவிட வேண்டாம். தயவு செய்து எல்லா நூல்களையும் கற்று, நீங்கள் ஒரு முடிவிற்கு வாருங்கள்.

பேனாவும் பேப்பரும் உங்க கிட்ட மட்டும் தான் இருக்கின்றதா? இவர்கள் தோழர் லெனினை அதிகப்படி புறக்கணிப்பார்கள். ஸ்டாலினை மட்டுமே முன்னிறுத்துவார்கள். தயவு செய்து லெனினின் நூல்களை ஆழப்படியுங்கள். உண்மை யில் லெனின் ஒரு நல்ல சித்தாந்தவாதி. அவரிடமிருந்து நிறைய தெரிந்துகொள்ள முடியும். தேசிய இனச் சிக்கல்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். நேரடியாக லெனினைப் படியுங்கள். ம.க.இ.க கண்ணாடியில்லாமல். அதுவும், லெனின் சோவியத் ரசியாவை உருவாக்கிய பின் அவர் அதில் கண்ட நடைமுறை சிக்கல்களை விவரித்து எழுதியுள்ளார். அந்தக் காலகட்ட நூல்களை ஆழப்படியுங்கள். ஒரு எடுத்துக்காட்டு, அதை அப்படியே ஆங்கில மூல வடிவில் தருகிறேன்.

Lenin, 1921a:521, 530: It is to be imagined that under such conditions Russia can pass immediately to socialism?. . . We went too far on the path of the nationalization of commerce and industry, and in the suppression of local trade. Was it a blunder? Yes, without question ௪. Capitalism will remain inevitable so long as we are unable to effect a direct transition from small industry to socialism. An attempt to completely suppress private trade ௲ which amounts to capitalism ௲ would be an absurdity because such a policy is economically unfeasible, and it would be suicide because a party which attempted it would be doomed to failure. It is not the growth of the petty bourgeoisie that has to be feared but the prolongation of famine, of misery, of the shortage of food.

தோழர் லெனின் தன்னைத் தானே கேள்விகேட்டுக்கொண்டு சுய விமர்சனம் செய்துகொண்ட மிகச்சிறந்த பகுத்தறிவுவாதி. தனது தவறுகளை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு, ஒரு சரியான இலக்கைக் காண முயற்சி செய்வார். எனவே தான் சொல்கிறேன், தோழர் லெனினின் ஒரு சரியான இயங்கியல்வாதி. இயங்கியல் தன்மையில் சமூகத்தை ஆராய்ந்தவர். எனவே தான் முதலாளித்துவ சமூகத் தேவையை அவர் விமர்சனக் கண்ணோட்டத்தோடு ஏற்றுக்கொள்கின்றார். படிநிலைகளில் உரிய மாறுதல்களுக்கு உட்படாத திடீர் சமூக உருமாற்றத்தால் ஏற்படக்கூடிய இயங்கியல் சிக்கல்களை தனக்கேயுரிய சித்தாந்தக் கூர்மையோடு விளக்குகிறார். ஆனால் அவை எல்லாவற்றையும் மறுத்து, சர்வாதிகாரத்தால் எதையும் எப்படியும் மாற்றிவிடலாம், செய்துவிடலாம் என்பது இயக்கவியல் மறுப்பு வாதம். அதன் விளைவுகள் தான் ‘லேபர் கேம்பு’கள். அதைத்தான் ஸ்டாலின் செய்தார். ஸ்டாலின் செய்தது குதிரைச் சவாரி. அதுவும், அதிகாரவர்க்க குதிரைச் சவாரி.

விடுதலைப்புலிகளையும் விமர்சியுங்கள். யாரும் விமர்சனத் திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஆனால் நமது விமர்சனம் ஒரே அளவுகோலு டனான வரலாற்று அறிவியல் பார்வையுடனானதாக இருக்க வேண்டும். ஈழத்திற்காக புலிகள் சிந்திய இரத்தம், தியாகம் அளப்பரியது. புலிகள் தனி ஈழத்தின் பெரும் பகுதியை வென்று எத்தனையோ காலம் ஆகின்றது. வென்றது மட்டுமன்றி அவர்கள் தனி ஈழத்திற்கான அரசு நடத்தியவர்கள். சர்வதேச அரசியல் சதியில் இந்தியாவும் சீனாவும் ஈழத்திற்கான அங்கீகாரத்தை மறுத்ததோடு மட்டுமல்லாமல் அதை வீழ்த்துவதற்கான இனப்படுகொலையையும் ஏவியுள்ளனர். இது வெறும் இலங்கையின் வேலை மட்டுமல்ல. இலங்கையின் பேரினவாத வெறி என்பது ஒரு அம்பு மட்டும்தான்; அம்பிலும் பாதி அம்பு. ஏனென்றால் ஏவியவர்களும், இலங்கைக்குள்ளேயே யிருந்து போரை நடத்தியவர்களும் இந்தியாவும் சீனாவும் தான். இந்த இரண்டு அணு ஆயுத வல்லரசுகளோடு எதிர்நின்று போரிடுவது என்பது ஆகக்கடுமையான சவால். ஆனால், நேர்மையானவனோடு, எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், நாம் எதிர்நின்று போரிடலாம். சதிகாரர்களுக்கு எதிராக அதுவும் இப்பிராந்தியத்தின் கடுமையான இரு வல்லரசுகளுக்கு எதிராக என்பது மிகக் கடுமையான போராட்டமே.

திட்டமிட்ட சதிவேலைகளை பன்னெடுங்காலமாக இந்திய உளவுத்துறை செய்துவருகிறது. அடிமுதற்கொண்டு ஊடுருவியி ருக்கும் அவர்களின் சதிவேலைகளால் புலிகள் எத்தனையோ துரோகங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதையும் மீறி ஒரு தனிப்பட்ட கட்டுக்கோப்பான தனிப்படையும், உளவுப் பிரிவும் கொண்ட, முப்படை ஆயுதங்களையும் சேர்க்க முடிந்திருக்கிற தென்றால் மிகவும் ஆழமான மக்கள் அரசியல் இல்லாமல் முடியாது. கடைசிவரை இலட்சக்கணக்கான மக்கள் புலிகளுக்கு அரணாக இருந்த நிகழ்வு சாதரணமானதொன்றல்ல. அது உயரிய புரட்சிகர ஜனநாயக அரசியல். அரணாக நின்ற மக்கள் தங்கள் இன்னுயிரையும் இனியவற்றையும் இழந்து நின்றிருப்பது என்பது உலகில் எங்குமே கண்டிராத மக்கள் அரசியல். அப்படிப்பட்ட இயக்கத்தையும், அதன் தலைமையையும் ஏதோ கிள்ளுக் கீரையை கிள்ளி எரிவதுபோல் கொச்சைப்படுத்தக் கூடாது, முடியாது. அந்தத் தியாகங்களையும் ஈகங்களையும் மறைத்துவிட்டு கொச்சைப்படுத்துவதே நோக்கமாக செயல்படும் அமைப்புகளை நாம் முழுமையாக சந்தேகிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பார்ப்பன எதிரிகள் என்பதையும் அடையாளம் கண்டு கொள்கிறோம். களத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்திருக்கும் என்பதை அப்போராட்டத்தின் பின்னல் வலை சிக்கல்களை ஆராயும்போதுதான் புரிந்துகொள்ள முடியும்.

தமிழீழ விடுதலை என்பது பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கிய போராட்டம்.

1. சிங்களப் பேரினவாத வெறி
2. புலிகளின் மரவுவழி இராணுவ தளவாட விரிவாக்கமும், விமானப் படைபலமும், அதை அடக்க முடியாத பலவீனமான இலங்கை அரசு என்ற சூழலில் புலிகள் ஏற்படுத்திய பிராந்திய பலப்பரிட்சை
3. இந்திய பார்ப்பன சதிகார பாசிச கும்பலின் தமிழ் தேசிய இன ஒடுக்கல்
4. ராஜீவ் கொலைக்காக பழிதீர்க்கத் துடிக்கும் சோனியா காந்தியின் குடும்பமும் அவர்களை முன்னிலைப்படுத்திய காங்கிரசுக் கட்சியும்
5. பூலோக அரசியல்
6. செஞ்சீனத்தின் சந்தர்ப்பவாத ‘சித்தாந்த’ சமரசவாதம்
7. 9/11க்கும் பிந்தைய சர்வதேச அரசியல்

புலிகளின் மரபுவழி இராணுவ தளவாடப் பெருக்கமும், பலநூறு கிலோமீட்டர்கள் சென்று குண்டுவீசும் விமானப்படையும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இலங்கையின் இராணுவ பலத்தை நிகர்செய்வதோடு மட்டுமன்றி சவால்விடும் அளவிற்கு ஒரு தனி நாட்டிற்கான அனைத்து இராணுவத்துறையிலும் வளர்ச்சிபெற்ற அமைப்பாக புலிகள் தங்கள் படைபலத்தை விரிவுபடுத்தியிருந்தனர். இது இந்திய இராணுவத்துறையிலும், உளவுத்துறையிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தாங்கள் ஒடுக்க நினைக்கும் ஒரு தேசிய இனம் இப்படிப்பட்ட பலத்தோடு உருவாவது அவர்களுக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தது. புலிகளையும் தனி ஈழ அரசையும் பூண்டோடு ஒழிப்பதன் மூலமே, புலிகள் ஏற்படுத்திய இந்தப் பிராந்திய பலப்பரிட்சையை சுழிநிலைக்குக் கொண்டுவர முடியுமென்று நம்பியது. சோனியாவின் தலைமையிலான காங்கிரசு இந்திய அரசை ஆண்டுகொண்டிருக்கும் வேளையில் ராஜீவின் கொலைக்குப் பழிவாங்க வேண்டுமென்ற வெறியும் இணைந்தே இருந்தது. சாதகமாக இனவெறிபிடித்த ஓநாய், இராஜபக்சேயின் ஆட்சியும் இலங்கையில் நடந்தது. எனவேதான் இது தான் தருணம் என்று புலிகளை அழிக்கும் வேலையில் ஈடுபட்டது இந்திய இராணுவமும், உளவுத்துறையும்.

இனிமேல் பிரபாகரனும், புலிகள் என்ற அமைப்பும் இருக்கவே கூடாது என்ற வெறியில் தான் கொடூரமான மக்கள் இனப் படுகொலையை ஏவிவிட்டுள்ளது இந்திய பார்ப்பன அரசும் இலங்கை இனவெறி அரசும். ஈழ மக்களின் ஆதரவும் பலமும் இருக்கப்போய் தானே இப்படி அவர்களால் வளர்ந்திருக்க முடிந்திருக்கிறது என சரியாகவே இந்திய அரசு புரிந்திருக்கின்றது. எனவே தான் அந்த இனத்தையே வாழத்தகுதியற்ற இனமாக மாற்றி, அந்த மக்களையே ஒரு தலைமுறைக்கு ஊனமுற்ற வர்களாக, தங்கள் வாழ்வில் ஏற்பட்ட கொடுமைகளை நினைத்து நினைத்துப் பார்த்துப் பயந்து ஒடுங்கி கூனிக்குறுகி வாழும் அடிமைகளாக மாற்றுவது என்று மாபெரும் சதித்திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள். இனத்தை அழித்தால் தான் புலிகள் என்ற அமைப்பையே வீழ்த்த முடியும் என்ற எதார்த்த சூழலில் இயற்றப்பட்ட திட்டமிது. இது புலிகள் மக்களோடு மக்களாக அரசியல் உணர்வோடு ஈழ விடுதலையைப் பின்னிப்பிணைத்திருப்பதற்கான வலிமையான ஆதாரம்.

ஒரு இனத்தை அழிக்கும் கொடூர ஆயுதங்கள், சர்வதேச இராணுவ முகாமையிட்ட இன அழிப்புப் போர், அழித்தே தீரவேண்டுமென்ற பாசிச வெறி, என்ற எதிர்ப்பை எந்த விடுதலைப் போர்க்குழு சந்தித்திருக்கிறது? நேபாளில், மக்கள் போராடும் போது இந்தியா, நேபாள அரசோடு சேர்ந்து பாஸ்பரஸ் குண்டு வீசியதா? சட்டீஸ்கர், ஒரிசாவில் நக்சலைட்டுகளை அழிக்க பீரங்கிகளும், ஆகாய குண்டுவீச்சுகளும் இந்திய அரசு நடத்தியதா? பாடிஸ்டாவிற்கு எதிரான போரிலும் அப்படிப்பட்ட கொடுமை களை ஃபிடல் காஸ்ட்ரோ சந்திக்கவில்லையே! ரசியப் புரட்சியின் போதும் அப்படிப்பட்ட அடக்குமுறைகளை போல்சுவிட்சுகள் எதிர்கொள்ளவில்லையே!

இவ்வளவு எதிர்ப்பையும் புலிகள் துணிவுடன் சந்தித்திருக்கின்றனர் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சிகர ஜனநாயக அரசியல் இயக்கமே என்பது தெளிவு. இதில் தோல்வி என்பது தோல்வியல்ல. ஒரு பின்னடைவே. இத்தனை மாதங்களாக இந்தப் போரை சந்தித்து எதிர்த்து நின்ற புலிகள் இந்த உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் போர்சக்தி. அதுவும் தமிழின தேசியப் போர்க்குரல்.

இன்னொரு சர்வதேச அரசியல் செய்தியைத் தெரிந்துகொள் ளுங்கள் மாவோயிஸ்டுகளே. நேபாளத்தில் இந்திய இராணுவத்தின் மேற்பார்வை யுடனான அரசை மட்டுமே மாவோயிஸ்டுகளால் ஏற்படுத்த முடியும். இல்லையென்றால், பெரும்பான்மை மக்கள் சக்தியிருந்தும், இப்பொழுது வெளியில் காத்திருப்பதுபோல் தான் மாவோயிஸ்டுகள் காத்திருக்க வேண்டும். நேபாள விடுதலைக்குமே இந்தியப் பார்ப்பனக் கட்டமைப்பு என்ற அரசு வீழ்த்தப்பட வேண்டும். இந்தியாவில் இருக்கும் எல்லா தேசிய இனங்களும் எழுச்சிபெற்று இந்தியக் கட்டமைப்பை வீழ்த்தாமல் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை வீழ்த்த முடியாது. நேபாளைப் பொருத்தவரையில் மாவோயிஸ்டுகள் சீனாவின் உதவி பெற்றிருந்தாலும், இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கம்யூனிச எதிர்ப்பு சதி வலிமையாகவே இருக்கின்றது.

திபெத்தை வலைத்துப்பிடித்த சீனம் நேபாளில் தனது காலை ஊன்ற முயற்சிப்பதை இந்தியா சரியாகவே புரிந்து கொண்டிருக்கின்றது. எனவே நேபாள இராணுவம் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் வரமுடியாத படியான இந்திய ஊடுருவல் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. தனது நாட்டின், தனது இராணுவத்தின் தலைமையை மாற்ற முடியாதபடியான சூழல் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கின்ற மாவோயிஸ்டுகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஒன்றுமில்லை ஒரு பூசாரியை மாற்ற முடியவில்லை. மாவோயிஸ்டுகள் ஒரு அரசியல் கட்சியாக மட்டுமே செயல்படமுடியும் என்ற இந்தச் சூழல் மாறவேண்டுமானால் இந்தியா வீழ்த்தப்பட வேண்டும். இந்தியா வீழ்த்தப்படுவது என்பது பார்ப்பன பனியா பன்னாட்டுக் கூட்டணியினை வீழ்த்துவது. அதை வீழ்த்த இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் சமூக சூழலில் தேசிய இனங்களின் எழுச்சியே. அதனை வளர்க்க வேண்டிய கடமை ஒவ்வொரு புரட்சிகர அமைப்புகளுக்கும் உள்ளது. இந்த யதார்த்தத்தை எல்லோரும் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் துணையோடு தோளோடு தோள்கொடுத்து தேசிய இன விடுதலையை நோக்கி உழைக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான எழுச்சியே விடுதலைப் புலிகளின் எழுச்சி. அது இன்று கொடூரமான வகையில் ஒடுக்கப்பட்டுள்ளது. எனவே புலிகள், ஈழ விடுதலை, இந்தியாவில் அது தூண்டும் தமிழ் தேசிய இன விடுதலை அது தோள் சேர்க்கும் பிற தேசியங்களின் இன விடுதலை என்பது இந்தியக் கட்டமைப்பை வீழ்த்துவது என்ற அரசியலே. இதுதான் சரியான அரசியல். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.

புலிகளின் பின்னடைவில் சேற்றை வாரியிறைக்கும் கூட்டங்கள் பார்ப்பன பாசிசத்திற்கு ஊன்றுகோளாக நிற்கும் துரோகிகள். புலிகளை கொச்சைப்படுத்துவது என்பது இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்களின் விடுதலைக்கு எதிரான செயல். அது இந்தியக் கட்டமைப்பை ஆதரிப்பதும், அதற்குத் துணைசெய்வதுமாகும். அந்த வகையில் நேபாள விடுதலைக்கும் அது எதிரான செயலே. இவையெல்லாம் இயங்கியல் எதார்த்தங்களே. மக்கள் இதனை அடையாளம் கண்டுகொள்வார்கள்.

புலிகளையும் பிரபாகரனையும் மலினப்படுத்தும் ம.க.இ.கவின் நோக்கம் இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. சோவியத்திற்கும் ஸ்டாலினுக்கும் ஒரு அளவுகோல், புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு அளவுகோலா? பெரியார் சொல்வார், ‘பார்ப்பானுக்கு இரட்டை நாக்கு என்று’, மேலும் சொல்வார், ‘அவனுக்கு முன் புத்தியும் இருக்காது, பின் புத்தியும் இருக்காது’ என்று. அதாவது வரலாற்று ரீதியாக எல்லா நிகழ்வுகளையும் இயக்கவியல் நெறியில் சிந்தித்து விமர்சனம் செய்யாது, தங்களுக்கு எதைப் பிடிக்கவில்லையோ, தாங்கள் எதை வீழ்த்தவேண்டுமென்று நினைக்கிறார் களோ அதன் மீது காழ்ப்புணர்ச்சியால் சேற்றையள்ளி வீசுவது; தங்களுக்குப் பிடித்ததை உயர்த்திப்பிடிப்பது, அது ஜனநாயகமற்றதாக இருந்தாலும். அப்போது அதிலிருக்கும் இரட்டை அளவுகோல் வெளிபட்டுவிடும். அதனால் தான் பெரியார் ஒருவர் கூறுகின்ற கருத்துக்களில் உண்மை என்னவென்று அறிய அப்படிப்பட்ட ஒரு சோதனையை செய்து பார்க்கச் சொல்வார். அதில் பார்ப்பான் கட்டாயம் மாட்டிக்கொள்வான். வேண்டுமென்றால், பெரியார் தாசனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ம.க.இ.கவே, நீ ஒரு பார்ப்பன இரட்டை நாக்கு, வெளுத்துப் போச்சு உன் மூக்கு! இப்பொழுது ஆனந்த விகடனோடு கூட்டு சேர்ந்துகொண்டார்கள். திராவிடன் பார்ப்பானை எதிர்ப்பதா? திராவிட அரசியலைக் கொச்சைப்படுத்தும் மருதையனுக்கு ஒரு மேடையமைத்துத் தந்திருக்கிறார்கள். அதில் அவர் பெரியாரைப் பற்றியும் திராவிட அரசியலைப் பற்றியும் மலினப்படுத்திப் பேசியுள்ளார். பெரியார் சாதி ஒழிப்போடு நின்றுவிட்டதாக புழுகுகிறார், மருதையன். பெரியார் தனிநாடு கேட்டு போராடியதையும், அந்தக் கோரிக்கையை முன்வைத்ததையும் வேண்டுமென்றே மறைத்துவிட்டார். பெரியார் இந்தியப் பார்ப்பனக் கட்டமைப்பை உடைக்க தனிநாடு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார். அதனை ஓசையில்லாமல் மருதையன் மூடிமறைத்துவிட்டார். பார்ப்பானுக்கு இரட்டை நாக்கு தானே!

ஆளையே மயக்கும் ஆனந்த விகடனில் மருதையன் மேலும் சொல்கிறார், இந்திய ஜனநாயகத்தை சீரமைக்க மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக்கொள்ளும் அதிகாரம் வேண்டுமென்று. அதை ரொம்ப நாளைக்கு முன்னாடியே சோரம்போன பூணூலிஸ்டு சோமநாத் சட்டர்ஜீ சொல்லிவிட்டார். சரி, திரும்ப அழைத்துக்கொள்வது என்பது மீண்டும் ஒரு ‘தேர்தல்’ வடிவில் தானே இருக்க முடியும்! அடப் பாவிகளா, எத்தனைத் தேர்தல்களையப்பா நீங்கள் மக்கள் மீது சுமத்துவீர்கள். அந்தத் தேர்தல் மட்டுமென்ன ஒழுங்காகவா நடக்கும். தேர்தலை புறக்கணிக்கச் சொல்கிறார்கள் இவர்கள்! இவர்கள் பேசும் ஒவ்வொன்றையும் சோதனைக் குழாயிலிட்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும் தோழர்களே. தயவு செய்து அப்படியே நம்பி விடாதீர்கள்.
தொடரும்

Wednesday, April 22, 2009

ம.க.இ.க ஒரு வெளிப்படையான பார்ப்பனக் கட்சியே!

முரண்பாடுகளின் மூட்டை என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 2009 புதிய ஜனநாயகம் இதழில் அதன் ஆசிரியர்குழு ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. கடந்த 5, 6 ஆண்டுகளாகவே மகஇக வினர் பெரியார் திராவிடர் கழகத்தையும் அதன் தலைமைப் பொறுப்பாளர்களையும் அரசல் புரசலாக ஆங்காங்கே தோழர்கள் மத்தியில் விமர்சித்து வந்தனர். வெளிப்படையாக அவர்கள் எதையும் விமர்சிக்காத தால் அவை அந்த அமைப்பின் தலைமைக்குத் தெரியாமல் ஆர்வக்கோளாறில் சில தோழர்கள் வைக்கும் விமர்சனம், அதைப் பெரிதாக நினைக்க வேண்டியதில்லை என ஒதுங்கி ஒதுங்கிச் சென்றோம். ஆனால் கடந்த சில மாதங்களாக குறிப்பாக தோழர் மதிமாறன் அவர்களின் ஒரு கட்டுரையைத் தொடர்ந்து சம்மந்தமில்லாமல் இணையதளங்களில் பல்வேறு புனைப்பெயர்களில். வலைப்பதிவுகளில் மகஇக வினர் வெளிப்படையாக பெரியார் தி.க வை மிகக்கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். முதலில் பெரியார் தி.க என்ற அமைப்பையும் அதன் தலைவர் களையும் விமர்சிக்கத் தொடங்கி பிறகு அது பெரியாரியலையும் கைவைக்கத் தொடங்கியது. தி.க வை குடும்ப அரசியல் செரித்துவிட்டது. எதிரி எவனும் அதை அழிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு அது சென்றுவிட்டது. எனவே பெரியாரியலை அடுத்த தலைமுறைக்குச் சரியாகக் கொண்டு செல்லப்போகும் அமைப்பு பெ.தி.க தான். அந்த அமைப்பை மோதிப்பார்க்கும் பணியைத் தொடங்க வேண்டும் என சில ஆண்டுகளாகத் திட்டமிட்டு காத்திருந்த தோழர்களுக்கு விடுதலை இராசேந்திரனின் வி.பி. சிங் பற்றிய மறுப்புக் கட்டுரை வாய்ப்பாகக் கிடைத்துவிட்டது. மதிமாறன் கட்டுரைகளில் பின்னூட்டங்களில் வம்பிழுத்துக் கொண்டிருந்தார்கள். மதிமாறன் அவர்களும் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக் கொண்டே வந்தார். நாம் ஒதுங்கி ஒதுங்கியே சென்றோம். இப்போது வெளிப்படையாக புதிய ஜனநாயகம் இதழில் அதன் ஆசிரியர் குழுவே களத்தில் இறங்கிவிட்டது அதற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் எந்தப் பெரியார் அமைப்பிலும் இல்லாதவர்கள், எல்லாப் பெரியார் தொண்டர்களுக்கும் பொதுவானவர்கள். ஒரு கட்சியை விமர்சிப்பது என்ற தளத்தைத் தாண்டி பெரியார் தத்துவத்தையே குறி வைத்து தாக்குவது என்ற தளத்திற்கு வந்துள்ள மகஇக பார்ப்பனத் தலைமைக்கு மிக மிக விரிவாக இப்பதிவில் பதிலைத் தர உள்ளோம். மகஇக என்பது ஒரு வெளிப்படையான பார்ப்பனக் கட்சியே என அம்பலப்படுத்தும் தொடர்கட்டுரையே இது.

ஏப்ரல் 2009 புதிய ஜனநாயகம் கட்டுரையில்...

“வி.பி.சிங் பற்றிய பல்வேறு கேள்விகள் எழுவதால் பெ.தி.க. தொண்டர்களைத் திருப்திப்படுத்திடப் பல்வேறு முரண்களோடும் திரிபுகளோடும் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.’’

நமக்குத் தெரிந்து, பெ.தி.க வில் உள்ள எந்தத் தோழனும் ஏதோ பெயருக்கு ஒரு கட்சியில் சேர்ந்து தாம் தான் உலகில் மிகப்பெரும் அறிவாளி என்ற போதையை ஏற்றிக்கொண்டு நடைமுறையில் கொள்கையின் வாடை கொஞ்சமும் இல்லாமல் வாழ்பவர்கள் அல்ல. தனது பார்ப்பனத் தலைமையை யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ம.க.இ.க வில் இருக்கும் அப்பாவி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட தோழர்களை ஏய்க்கும் நோக்கில் இடஒதுக்கீட்டையும், வி.பி. சிங்கையும் விமர்சித்து வரும் பார்ப்பன கும்பலுக்கு பெ.தி.க தோழர்களை விமர்சிக்கும் உரிமை எள்ளளவும் கிடையாது. பார்ப்பனத் தலைமையை வெட்கமின்றி - எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டு ஊர்வலங்களில் மட்டும் “இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின் செல்லாதே” என அர்த்தமின்றி முழக்கமிடும் அப்பாவித் தொண்டர்களல்ல பெ.தி.க தோழர்கள். திருப்திப்படுத்த வேண்டுமென்றால் ம.க.இ.க என்ற இந்தப் பார்ப்பனக் கம்பெனியை மறைமுகப் பார்ப்பனீயம் என்று தயங்கித் தயங்கி விமர்சிக்காமல் வெளிப்படையான பார்ப்பன கம்பெனி என பெரியார்முழக்கம் அறிவித்திருக்க வேண்டும். ம.க.இ.க வின் பார்ப்பன நிலைப்பாடுகளை அவ்வப்போது அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதால்தான் பெ.தி.க தோழர்கள் திருப்பியில்லாமல் இருக்கிறார்கள். இதை முதலில் ஸ்ரீரங்கப் பார்ப்பனர் புரிந்து கொள்ள வேண்டும்.

“வி.பி.சிங்கை விமர்சிப்பதையும், இடஒதுக்கீட்டில் மாற்றுப் பார்வை வைத்திருப்பதையும் மட்டும் வைத்து ஓர் அமைப்பின் பார்ப்பனிய எதிர்ப்பை அளவிடுவதுதான் பகுத்தறிவுப் பார்வையா?”

அளவிட வேண்டியது பார்ப்பன எதிர்ப்பை. அதற்கு அளவு கோலாக வைத்திருப்பது இடஒதுக்கீட்டை. பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் பலவித நடவடிக்கைகளில் ஒன்று இடஒதுக்கீடு. அந்தப் பிரச்சனையில் ஒருவன் என்ன நிலைப்பாடு எடுக்கிறானோ அதை வைத்து அவனை எடை போடுவதுதான் மிகச்சரி. இடஒதுக்கீடுப் பிரச்சனையில் ம.க.இ.க ஒரு பார்ப்பனக் கும்பல்தான் என்பதை நிரூபித்துவிட்டது. இதில் மட்டுமல்ல, இன்னும் பல நேரங்களில் தன்னை பார்ப்பனக்கம்பெனி என்றே உறுதியாக்கியுள்ளது. தனது ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் பார்ப்பனக் கருத்தியலைத் தான் மகஇக கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பெரியார் திராவிடர் கழகத்தின் பழனி தோழர் மௌ.அர. சவகர் அவர்கள் எழுதி அனுப்பியுள்ள ஒரு கட்டுரையைப் முதலில் படியுங்கள்.

ம.க.இ.க. தோழர்களுக்கு மட்டுமல்ல

தற்போது ம.க.இ.க.வும் பெரியார் திராவிடர் கழகமும் இணையத்திலும் இதழ்களிலும் மோதத்தொடங்கியுள்ளன.ஆரம்பம் தோழர் மதிமாறனிடம் தொடங்குகிறது. பின் அது படிப்படியாக பெரியார் திராவிடர் கழகம்என்பதிலிருந்து பெரியாரிடம் வந்து சேர்ந்து உள்ளது.வரவேற்கிறோம்.ஏனெனில் இதுதான் ம.க.இ.க.விற்கும் பெரியார்திராவிடர் கழகத்திற்கும்(பெரியார்) உள்ள உண்மையான முரண்பாட்டை வெளிக்கொணரும்.அந்த வகையில் தோழர்.இரயாகரன் அவர்களுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.ஏனெனில் அவர்தான் 5 கேள்விகளை முன் வைத்து அதற்கு தங்களதுநிலைப்பாட்டையும் வைத்துள்ளார்.

1) பிறப்பில் பார்ப்பானாகப் பிறந்தவன்பார்ப்பனியத்தை எதிர்த்து போராட முடியாதா?

2) பெரியாரின் பார்ப்பனிய(சாதி) ஒழிப்பு எப்படி எந்த வழியில் சாத்தியமாகும்?

3) பெரியாரியஅமைப்புகள் சாதியை (பார்ப்பனிய) ஒழிப்பை எப்படிநடைமுறையில் வைக்கின்றன?

4) ம.க.இ.க.பார்ப்பனியத்தை எந்த வகையில் ஆதரிக்கின்றது?

5) வி.பி.சிங்கின் அரசியல் என்ன?

இதற்கு அவர்களது நிலைப்பாடு:

1) பிறப்பால் உயர்சாதியில் பிறப்பவன் சாதி அடையாளத்தை இழந்து அதற்கு எதிராகப்போராட முடியும்.இதை மறுப்பது சாதிய சித்தாந்ததை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனிய்ம்தான்.

2) பெரியார் சாதிய சமூக அமைப்பின்மேல் அதை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் மேல் விமர்சனம் செய்தவர்.இதன் மூலம் சமூகத்தை விழிப்புறச் செய்தவர்.இதற்குமேல் சாதியை ஒழிக்க அவரால் வழிகாட்ட முடியவில்லை.

3) பெரியார் இயக்கத்திடம் சாதியை ஒழிக்கத் திட்டம் கிடையாது.விழிப்புணர்வு பிரச்சாரம் தாண்டி சாதியை ஒழிக்கும அரசியல் திட்டம் கிடையாது.

4) ம.க.இ.க. சாதியை ஒழிக்கும் அரசியல் வழியைக்கொண்டுள்ளது.அது பார்ப்பனியம் என்றால்,அதை எப்படி ஏன் என்று விளக்குங்கள்.இட ஒதுக்கீடுத்திட்டம் ஒரு கொள்கை ரீதியாக வைத்துள்ளனர்.அது தவறு என்றால் ஏன் எப்படி என்று விளக்குங்கள்.

5) வி.பி.சிங் இந்தியாவின் பார்ப்பனிய சமூக அமைப்பின் ஒரு ஆளும் வர்க்க பிரதிநிதி.அரசியல் இருபுக்காக சமூகக் கொந்தளிப்பை தவிர்க்கச்செய்யும் சீர்திருத்தங்கள் சமூகத்தை மாற்றுவது இல்லை.

நன்றி தோழரே!தங்களது எல்லாக்கேள்விகளும் தங்களது நிலைப்பாடும் நமது அடிப்படை முரண்பாடின்மீதே நிற்கிறது.பார்ப்பனர் என்பது த்ங்களைப் பொறுத்தவரை ஒரு உயர் சாதி மட்டுமே.அதாவது நிலபிரபுத்துவத்தின் இந்திய வடிவம் அதுவும் பார்ப்பனர் அல்ல பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை அவ்வளவே. பார்ப்பனர் என்பது நாயக்கர்,கவுண்டர்,வன்னியர்,பிள்ளைமார் போன்ற ஒரு உயர் சாதியினரே இதுதான் தங்களது நிலைப்பாடு. தங்களது நிலைப்பாட்டின்படி இங்கு ஆளும் வர்க்கம்

“அமெரிக்கத் த்லைமையிலான மேல் நிலை வல்லரசுகள்,தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம்,நிலபிரபுத்துவம்”

இதைப்பார்க்கும்முன் முதலாவது கேள்விக்கான பதிலை பார்ப்போம்.காலகாலமாக அடிமைப்படுத்திவரும் பார்ப்பன சுரண்டல் அமைப்பில் பார்ப்பனர்மீதான நம்பிக்கை துளியும் இல்லை.மாறாக அவர்கள் எமது போராட்டக்களத்துக்கோ அல்லது எமது கொள்கை வழி நடைமுறைக்கு ஊறு விளைவிக்காத ஆதரவோ கொடுத்தால் அதை உபயோகிப்பதில் எந்தத் தடையும்மில்லை.மாறாக இதையே உபயோகித்து மீண்டும் தலைமையைக் கைப்பற்றினால் என்னவாகும் என்ற வறலாற்று ரீதியான அனுபவந்தான் பார்ப்பனரை அமைப்பில் உறுப்பினராக்க மறுக்கிறது.திராவிட இயக்கத்தில் தோழர்.அண்ணாத்துரை செய்த திராவிடர் என்கிற பதத்தில் ‘ர்’அய் நீக்கியும் பார்ப்பனர் எதிர்ப்பு என்கிற பதத்தை ‘பார்ப்பனியம்’ என்றும் மாற்றியதன் விளைவுதான் அந்தத் திராவிட இயக்கத்திற்கு ஒரு பார்ப்பன பெண்மணி தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டது.மேலும் பார்ப்பனியத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் போராடவேண்டும் என்பதுதான் எமது ஆசையே.அப்படிப்போராடுகிறவர்களும் போராட்டக்களத்திற்கே வரட்டும். மாறாக இயக்கத்தை முடிவு செய்ய ததுவதை வடிவமைக்க பார்ப்பனர்கள் தேவையே இல்லை.இதுதான் எமது நிலைப்பாடு.

சரி அடுத்ததாக த்ங்களது ஆதிக்கச்சக்தி பற்றிய நிலைப்பாட்டிற்கு வருவோம்.ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவம் இதனூடாக நிலபிரபுத்துவம். நிலபிரபுத்துவம் இங்கு என்னவாக உள்ளது? பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை.அப்படியானால் நிலபிரபுத்துவமும் பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறையும் ஒன்றா? இதில்தான் சிக்கல் தொடங்குகிறது.இது நிலபிரபுத்துவம்தானா அல்லது இந்தப்பெயரால் பார்ப்பனச் சுரண்டல் மறைக்கப்படுகிறதா?பார்ப்போமா!மார்க்கிய அடிப்படையான நிலபிரபுத்துவம்தான் இது சற்று மாறுதலுக்கு உட்ப்பட்டதுஎன்பது போலத்தான் இந்த விளக்கம் உள்ளது.சுமார் 2000 ஆண்டுகளாக ஒரே சமூக அமைப்பாக இருந்த இந்த சமூக அமைப்பு அதாவது எந்த சமூக மாற்றதிற்கும் உள்ளாகாத (அசோகர்,களப்பிரர் ஆட்சிகளில் மட்டும் சற்று அசைந்து கொடுத்தது)சமூகமாக இருந்து வந்தது(வரலாற்றுத் தேக்கம்) தங்களது. கூற்றுபடி நிலபிரபுத்துவம் எனில் என்ன நடந்திருக்கவேண்டும் அடுத்த சமூக மாற்றத்திற்குச் சென்றிருக்க வேண்டுமல்லவா? மாறாக என்ன நடந்தது? எந்தமாற்றமுமே நடக்கவில்லை.ஏன்?வெள்ளையர் வருகைக்கு முன் 54 தேசங்களாக இருந்த(சமஸ்தானங்களாக) நம் நாடு நிர்வாக வசதிகளில் வேறுபட்டு இருந்தாலும் சமூக அமைப்பால் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.மிகப் பெரும்பான்மையான உற்பத்திமுறை விவசாயம்தான்.மன்னர்களும்,செல்வத்தர்களும் இருந்தனர்.முக்கியமாக சாதி முறை வருணாச்சர்ம அடிப்படையில் நடைமுறையில் இருந்தது.என்ன நடந்திருக்க வேண்டும்? நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகள் உபரி உற்பத்தி அபகரிப்பின் காரணமாக முரண்பட்டு(பகை) மோதி அடுத்தச் சமூக அமைப்புக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லவா?அது நடந்ததா? இல்லையே.இன்னும் சொல்லப்போனாலஆதிக்க வர்க்கம் தன் மூளைஉழைப்பையும்(யுக்தி) முதலீட்டையும் செலுத்தி உபரி உற்பத்தி அபகரிப்பை அதிகரிக்கச் செய்யும் முயற்சியே வர்க்க மோதலின் அடிப்படை.அதிகார வர்க்க நலனுக்கான யுக்தியும்,வர்க்க மோதலும அடுத்தபடி நிலைக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டுமே!அது நடந்ததா? இல்லையே! மாபரும் வரலாற்றுத் தேக்கம் தானே நிகழ்ந்தது.ஏன் என்பதை பின்னர் பார்ப்போம்.

முதலில் இச்ச்மூக அமைப்பை நிலபிரபுத்துவம் என அழைப்பது தேவை இல்லாத ஒன்று என்பது தெளிவு. அப்படியானால் இது என்ன சமூக அமைப்பு?அதாவது என்ன சுரண்டல் முறை? இம்மண்ணில் உள்ள சுரண்டல் முறை “பார்ப்பனிய உற்பத்திமுறை”.அது என்ன பார்ப்பனிய உற்பத்திமுறை?

நிலபிரபுத்துவ உற்பத்தி முறையில் நிலபிரபு !---முதலாளித்துவ உற்பத்தி முறையில் முதலாளி!--- இவர்கள்தான் பிரதானமாய் உபரி உற்பத்தியை அபகரிப்பர்.உற்பத்திமுறையும் அதற்கேற்றாற் போல் அமைந்திருக்கும் ஆனால் ந்ம் நாட்டில்??

இன்றும் கூட கண்டதுண்டா கண்டதுண்டா கல் உடைக்கும் பார்ப்பானைக் கண்டதுண்டா????கண்டதுண்டா கண்டதுண்டா நாற்று நடும் பார்ப்பனத்தியைக் கண்டதுண்டா???? கண்டதுண்டா கண்டதுண்டா மலம் அள்ளும் பார்ப்பனைக் கண்டதுண்டா????

இல்லையே .இது எதைக்காட்டுகிறது?உடல் உழைப்பில் இச்சமூகம் இல்லாமலேயே சுரண்டலை அமல்ப்படுதி வந்துள்ளது.வருகிறது.ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக சமூகம் தேங்கிக்கிடந்ததாகச் சொன்னோமே காரணத்தைப் பார்ப்போமா!எந்த ஒரு சமூகத்திலும் ஆதிக்கச்சக்தி தன் சுய லாபத்திற்காக [உபரி உற்பத்தி அபகரிப்பின் அளவை அதிகப்படுத்த] உற்பத்திக்கான யுக்தி,முதலீடு இவற்றில் உயர் நிலை மாற்றம் செய்வர்.ஆனால் நம் நாட்டில்,விவசாயம்,நெசவு வேலை,மண்பாண்டம் செய்தல் போன்று ஒவ்வொரு தொழிலும் யார் யார் ஈடுபடுவது என்பதை அவர்கள் சாதியே நிர்ணியத்தது.உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாது பார்ப்பனர்கள் மேலே சொன்ன பொருள் உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பதில் முதலிடம் பெற்றார்கள்.அதாவது உற்பத்தி விசைகளான மனிதர்களை சாதியே நிர்ணயித்தது.இங்குதான் நிலபிரபுத்துவம் என்பது பொருத்தமற்ற வார்த்தை என்பது புல்னாகும்.

மார்க்கிய கண்ணோட்டத்தில் சாதி கருத்தியல் கூறு[மேல் கட்டு மானம்]ஆனால் நம்நாட்டில் உற்பத்தி விசைகளான மனிதர்களை சாதி நிர்ணயித்தபோதே சாதி பொருளியல் கூறு என்றாகி விட்டது[கீழ் கட்டுமானம்]. இதைத் தோழர் பெரியார் மிகச்சரியாக,”மக்களைச் சாதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு சாத்க்கும் இன்னின்ன தொழில் என்று கற்பித்து அந்தத் தொழிலை அந்தந்தச் சாதி தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டியதுதான் மனித தர்மம் என்கிறதான நிர்பந்தம் இங்கு இருந்த்து வருகிறது”.

குடி அரசு:-07.06.31

மேலும் உற்பத்திமுறையில் சாதியின் ப்ங்கு பொருளாதாரச் சுரண்டலுக்கு எவ்வாறு அடிப்படையாக இருந்தது என்பதைத் தோழர் பெரியார்,

”வர்ணாசிர்ம தர்மப்படி இன்னின்ன வகுப்புகளுக்கு இன்னின்ன தொழில்[உற்பத்தி விசைகள்]இன்னின்ன உரிமைகள்[உற்பத்தி உறவுகள்]என்பதான திட்டமே நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கு இல்லாமல் தடைப் படுத்திக் கொண்டிருக்கிறது.”

குடி அரசு :-13.09.31

மற்ற சமூக முறையில் ஆதிக்கச்சக்திகள் உற்பத்துயோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும்.ஆனால் பார்ப்பனிய உற்பத்திமுறையில் அவ்வாறு இல்லை என்பதே மற்ற ஆதிக்கச்சக்திகளுக்கும் பார்ப்பன ஆதிக்கச்சக்திக்கும் உள்ள வேறுபாடு.பார்ப்பனர்கள் உபரிஉற்பத்தி அபகரிப்பின் ஆதிக்க வகுப்பாய் இருந்து சுரண்டுவதை தோழர்.பெரியார்

”மனிதனாகப் பிற்ந்தவன் எல்லாம் அதாவது எவனாவது தன்னை இந்து என்று சொல்லிக்கொண்டால் அவனை உடனெ பார்ப்பன வரிச்சனியன் பிடிதுக்கொண்டது என்பது போல கால வரையரை ஒன்றுமே இல்லாமல் கர்ப்பந்தரித்தது முதல் சகும் வரை செத்தும் விடாமல் அதாவது கர்ப்ப்மானவரி,சீமந்தவரி,பிள்ளைப் பேறு வரி,தீட்டுக்கழித்தல் வரி,வித்தியாபியாச வரி,கல்யாண வரி,சாந்திமுகூர்த்த வரி சாவு வரி,சாக 10 நாழிகை வரி ,செத்தபின்னால் வரி,செத்தவர் மக்களிடமிருந்து வருசா வ்ருசம் வரி - ஆகிய பல துறைகளில் காலாவதி இல்லாமலும் ஒரு நபரைக்கூட விடாமல் 100க்கு100 பேரிடமும் பணக்காரண் ஏழை என்ற பாகுபாடே இல்லாமல் கொடுப்போர் முட்டாள்தனத்திற்கும் களிமண் மூளைக்கும் தகுந்தாற்போல் வரி கறந்து விடுகிறார்கள்”.

குடிஅரசு :-09.01.27

இது உபரி உற்பத்தியின் மூன்றில் ஒரு ப்ங்கு. உபரி உற்பத்தியின் இரண்டாம் பகுதி யாகம்,சடங்கு கோயில் உள்ளீட்ட மூடநம்பிக்கைகளில் விரயமானது அல்லது முடக்கப்பட்டது.மூன்றாம் பகுதி வரலாற்றுத் தேக்கத்திற்கு ஆதரவு அளித்து வந்த அரசு அமைப்பு எந்திரத்தைத் தாங்கச்சென்றது.இந்த வரலாற்றுத் தேக்கத்தை சில அரசுகள் சீர்குலைவை ஏற்படுத்தினாலும்[அசோகர் மற்றும் களப்பிரர் ஆட்சி] சமுதாயத்திற்கு பொருளாதாரமும் அரசியலும் கட்டுப்பட்டு இருந்ததால் அந்த அரசுகள் மாற்றி அமைக்கப்பட்டன.

இதையே தோழர்.மார்க்ஸ் ,

”எல்லா மக்கள் போராட்டங்களும்,அந்நிய படையெடுப்புகளும்,வெற்றிகளும்,கடும் பஞ்சங்களும் இந்திய சமூக அமைப்பின் மேல்தட்டுப் பரப்பினை மட்டுமே தொட்டன.மேற்சொன்னவை இந்துஸ்தானின் அடுத்தடுத்த செயல்கள் போலவே கடும் சிக்கலாகவும் திடீர் எனவும்,அழிப்பதாகவும் தோன்றினாலும் இதுதான் நிலைமையாக இருந்துவந்துள்ளது”.

[British Rul in India – Karl Markx]

காலனி ஆதிக்கத்தின் போது ,பிரிட்டனின் வருகையால் ,அபோது இருந்த உபரி உற்ப்த்தி அபகரிப்பின் தன்மையோடு காலணியச்சுரண்டல் குறுக்கிட நம் சமூகத்திலும் அரசியல்,பண்பாடு மற்றும் பொருளாதார அரங்குகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுத்தியது.இதனால் அத்திரம் அடைந்த பார்ப்பனர்கள் இயற்கையாகவே அந்நிய சக்திகளின் மேல் இருந்த கோபத்தை பயன்படுத்தியது.1857 சிப்பாய் கலகம்.

“லார்டு டல்ஹெளசியின் சீர்திருத்தங்கள்,ஒரு சிலரான பார்ப்பனருக்கு ஏகபோக உரிமையாக இருந்த கல்வியை நாடெங்கும் எல்லோரும் படித்து ப்யன் பெறும் வண்ணம் பரப்பிய முறையும்,இரயில்,நீராவி எஞ்சின்,தந்தி சாதனம் போன்று முறைகளைப் புகுத்தியமை போன்ற சீர்திருத்த்ங்களையும் கண்டு வைதீக மேல்சாதிக்காரர்கள் என்பவர்கள் வெகுண்டார்கள்.இத்தகைய அறிவு வளர்ச்சி,தங்களுடைய ஆதிக்கத்திற்கு எங்கு உலை வைத்துவிடுமோ என்றஞ்சி எதைச் செய்தால் இவைகளை ஒழித்துக்கட்டலாம் என நினைத்து அதைக் கண்டுபிடித்து பாமரம்க்களான,சிப்பாய்களாக இருந்த வைதீக மனப்பான்மையாளர்களை,’உங்கள்சாதியும்,மதமும் ஒழிந்துவிட வெள்ளையன் ஏற்பாடு செய்கிறான்’என்றுகூறி வெள்ளைக்காரர்களை எதிர்க்கச்செய்தனர்.இந்தச் சீர்திருத்த்ங்களும் விஞ்ஞானக்கல்வியும் பரவினால் எங்கே சாதி முறையும் அதையொட்டி அமைந்துள்ள கீழ் சாதி மக்களின் பணிவும்,அடிமைத்தனமும் மாறிவிடுமோ என்ற சுயநல எண்ணதின் பேரில்தான் மற்றவர்களைத் தூண்டினர்.’துப்பாக்கிகளில்க் கொழுப்பை தடவிக்கொடுத்தனர்,என்ற குற்றச்சாட்டிலும் கூட இந்துச் சிப்பாய்களிடம் அது பசு மாட்டுக்கொழுப்பு என்றும் முஸ்லீம்களிடம் அது பன்றிக் கொழுப்பு என்றும் பிர்ச்சாரம் செய்தது.அவரவர்களுக்கு உள்ள மத உணர்ச்சிகளையும் அதனடிப்படையாகப் பிறந்த மூட நம்பிக்கையையும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது.மேற்கண்ட உண்மைகளைவைத்துப் பார்த்தால்,1857 கிளர்ச்சி வெள்ளையனுடைய ஆதிக்க வாழ்வை எதிர்த்து ஏற்பட்டதன்று என்பதும் அவனுடைய சீர்திருத்தங்களினால் விளைந்த பலன்களை எதிர்த்தே ஏற்பட்டது என்பதும் புலனாகும்”.

தோழர் பெரியார், விடுதலை :-15.08.1957

இதன் பின் செய்த ஒப்பந்தம் என்ன? மத விவகாரக்களில் வெள்ளையன் தலையிடக்கூடாது என்பதுதானே!அரசியல் மற்றும் பொருளாதாரம் இரண்டும் சமூகம் பெற்ற பிள்ளைகள்ட் என்ற அடிப்படையில் சமூகம் தன் கையில் உள்ளது என்பதால் அரசியலையும் பொருளாதாரத்தையும் மாற்றி அமைக்கும் சக்தி தனக்குண்டு எனப் பார்ப்பனக் கூட்டம் நிரூபித்தது.இதன் முடிவாக உருவான வரலாறு பார்ப்பனர்களுக்கும் காலனியத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஊடல் கூடல் தொடர்பாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிப் போக்கின்போது இந்த புதிய விளைவின் எதிர் பலன்களை அனுபவிக்க ஒரு வித்தியாசமான தொழில் வியாரப் பிரிவினர் த்ன்றினர்.அவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பனியத்திற்கும் காலனியத்திற்கும்நண்பர்க்ளாய் விளங்கினர்.இந்தப் புதியவிளைவின் நேரானபலன்கள்[Positivi] சமுதாயத் தேக்கத்திற்குஅபாயகரமாக அமைந்தது.இத காரல் மார்க்ஸ்,

”இங்கிலாந்தின் குற்றங்கள் எவையாக இருந்தாலும் இந்திய சமூக அமைப்பில் ஒரு அடித்தளப் புரட்சியைக் கொண்டு வருவதில் வரலாற்றின் சுய நினைவற்ற கருவியாக இங்கிலாந்தும் செயல்பட்டது.”

[The Biritish Rule in India]

சமூகத்தேக்கத்திற்கு அபாயமக உருவெடுத்த இந்த புதியபலன்களின் நடைமுறை வளர்ச்சி தமது ஆதிக்கத்திற்கு ஆபத்தாகிவிடும் என பயந்தனர்.அவர்கள் எதிர் பார்த்தது போலவெ உருவானதுதான் நீதிக்க்ட்சி.எனவேதான் ஊடகங்கள் அனைத்தும் நீதிக்கட்சியை வெள்ளையன் அடிவருடி எனப் பிரச்சாரம் செய்தது,செய்தும் வருகிறது.மேலும் காலனிய பாதிப்பால் இங்கு முளைவிட இருந்த தேசிய இயக்கங்களை முளையிலேயே கிள்ளி எறியபார்ப்பனர்கள் இந்த்திய தேசியத்தை உருவாக்கினார்கள்.இந்தத்தேசியத்திற்கு புதிதாக உருவான வியாபாரப்பிரிவினர் ஆதரவும் தந்தனர்.உண்மையான தேசிய இயக்கங்கள் முதலில் பார்ப்பனியத்திற்கு எதிராக முளைவிட்டாலும் இறுதியில் காலனியத்திற்கு ஆபத்தாக முடியும் என்பதால் காலனியவாதிகள் ‘இந்திய தேசியத்தையே’ விரும்பினர்.எனவே பார்ப்பனிய காலனிய நலன்களுக்குப் பாலமமைக்கும் முயற்சியாக இந்திய தேசியக் காங்கிரஸ் உருவானது.இருந்தாலும் தவிர்க்க இயலாமல் ஏற்பட்ட உபரி உற்பத்தி அபகரிப்புப் போட்டியால் வரலாற்றுத் தேக்கம் அரிக்கப்பட்டதன் காரணமாக சாதி எதிர்ப்பு பார்ப்பனர் எதிர்ப்பு மற்றும் உண்மையான தேச மற்றும் சோசலிச இயக்கங்கள் உருவெடுத்தன. சமுதாயத் தேக்கத்தின் பொருளியல் அடித்தளம் அரிக்கப்படுவதைத்தடுக்க’இந்திய தேசியவாதிகள்’மேற்கொண்ட சூழ்ச்சியே இந்திய தேசிய விடுதலயாக சித்தரிக்கப்பட்டது.

இந்தப் பார்ப்பனச் சுரண்டலை மறைத்து நிலபிரபுத்துவம் எனகூறுவது யாரைக் காப்பாற்ற?இல்லை இல்லை நாங்கள் பார்ப்பனிய சாதியஒடுக்குமுறையைத்தான் கூறுகிறோம் என்றால் இந்தப்பதத்தை உபயோகிக்க வேண்டியதுதானே?அப்புறம் என்ன நிலபிரபுத்துவம் என்ற வார்தை?????

சரி தற்போது………..தற்போதும் சமூகத்திற்குக் கட்டுப்பட்டே அரசியலும் பொருளாதாரமும் உள்ளது.1947க்குப் பின் அதிகாரம் முழுமையாக பார்ப்பனர்களுக்குப் போய் சேர்ந்தது.அந்த வியபாரப்பிரிவினர் இந்திய தேசிய்ம் காக்கும் முதலாளிகள் ஆயினர்.அதாவது இந்தியதேசிய முதலாளிகள் ஆயினர்.அதுவரை பிரிட்டன்மட்டுமே இந்நாட்டைக் கொள்ளை அடித்துவந்த அந்நியதேசம் என்பதுமாறி பன்னாட்டுச் சக்திகளும் களம் இறங்கின.[இந்திய விடுதலையில் அமெரிக்காவின் ஆர்வம்,நேருவின் அமெரிக்க நட்பு] எனவே இங்குபார்ப்பன-இந்திய தேசிய-பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளை என வடிவம் பெற்றுள்ளது. இதிலும் பிரதானமாக பார்ப்பனரே உள்ளனர்.இந்தப் பார்ப்பனகட்டமைப்பின் மேல் அமர்ந்துள்ள மற்ற சுரண்டல் அமைப்புகளும் தாங்களது பாதுகாப்பு என்பது பார்ப்பனக் கட்டமைப்பின் வலிமையைப் பொறுத்ததே என உணர்ந்துள்ளதால்தான் ஆரம்பத்தில் காக்கிரஸுக்கு கொடுத்து வந்த ஆதரவில் பெரும்பான்மையை பி.ஜே.பி. போன்ற நேரடி பார்ப்பன அமைப்புக்குத் தருகின்றனர்.இந்த அரசு அமைப்பில் பார்ப்பன ஏகபோகம் இருப்பதுதான் நல்லது என்பதால் இடஒதுக்கீடு என்றவுடன் தகுதி திறமை எனக்கூச்சலிடுகின்றனர்.இந்தப்பார்வையோடுதான் இட ஒதுக்கீடு,வி.பி.சிங் மற்றும் மண்டலைப் பார்க்க வேண்டும்.அரசு அதி காரங்களில் ஏற்படும் பன்மைத் தன்மை என்பது ஆதிக்கதிற்கு ஆப்பு வைக்கும் என்பதாலேயே மண்டலைக் குழி தோண்டிப் புதைக்கத்துடித்தனர்.மண்டலுக்கு எதிராக நடந்த யத்திரை மீண்டும் சிப்பாய்கலகத்தை நினைவுபடுத்துகிறது.

பார்ப்பனருக்குப் பாதகமான சூழல் வெள்ளையரால் ஏற்படுவதைத் தடுக்க எப்பட் சிப்பாய்க் கலகமோ அதைப்போலத்தான் அத்வானியின் ரத யாத்திரை.மதம் கையில் எடுக்கப்பட்டவுடன் தமிழகம்,உ.பி.,பீகார் தவிர்த்து இந்தியா முழுதும் ராமன் உயர்த்திப் பிடிக்கப்பட்டான்.மண்டல் மண்ணைக்கவ்வியது.ஆனாலும் அதன் விளைவுகள்பார்ப்பன ஏகபோகத்தை அகில இந்திய அளவில் வெளிக்கொணர்ந்தது.தற்போதுதனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்ற நிலைபாடு அரசியல் தளங்களில் பிரதிபலிக்கக்காரணம் மண்டலே. இந்த மண்டல் அறிக்கையை வி.பி.சிங்.வந்துதானே அமல்ப்படுத்தினார்.அதுவும் அரையும் குறையுமாக- காரணம் என்ன.பார்ப்பன நெருக்கடி.

பார்ப்பனிய சமூக அமைப்பின் ஆளும் வர்க்கப் பிரதிநிதி ஒருக்காலும் அரசு அதிகார மய்யத்தின் ஆளும் சக்தியை ஒரு போதும் பார்ப்பனர்களிடமிருந்து பிரிக்க அதற்கு முயற்சி செய்யவே மாட்டார்கள்.அப்படியிருக்க வி.பி.சிங் ஏன் அதைச் செய்ய வேண்டும்?மேலும் பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் சம்மம் இல்லை. மாறாக ஒருவர் மீது ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.மேலே இருப்பவன் பார்ப்பான்.அடுத்தடுத்துள்ள மக்கள் படிப்படியாக உரிமை இழந்துள்ளனர்.சம்மில்லாம்லும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டும் அதேசமயம் தனக்குக்கீழ் உள்ள சாதியினரின் ஒடுக்கலுக்கு துணையாகவும் இருந்து வருகின்றனர்.அவர்கலது விடுதலையில்தான் தம் விடுதலை என்பதை உணராமலும் உள்ளனர்.இது பிற்படுத்தப்ப்ட்டவருக்கு ம்ட்டும்ல்ல தலித்துகளுக்கும் பொருந்தும்.எனவேதான் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெறுகிறது.இந்திய தேசிய அரசியலில் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் எப்போது வந்தது?மண்டலுக்குப்பின்னர்தானே?

30 வருடங்களுக்கு முந்தைய அரசியலும் தற்போதைய அரசியலும் எவ்வளவு மாறுட்டுள்ளது.மாயாவதி என்கிற தலித் பெண்மணி அதுவும் உ.பி.ல் முதல்வர் ஆவது எப்படி சாத்தியம் ஆயிற்று?அவர் பார்ப்பனரோடு சமரசம் வைத்தலும் ஒரு தலித்தை தத்லைமை எற்க பார்ப்பனச்சமூகம் அக்கீகரித்து இருக்குமா?சமூகக் கொந்தளிப்பை தவிர்க்க வி.பி.சிங். இதைச்செய்தார் என்றால் அப்போது இருந்த சமூகக் கொந்தளிப்பு என்ன கொந்தளிப்பு?அவர் அரசியல் இருப்புக்காக இதைச் செய்தார் என்றால் - உண்மையைச் சொல்லப்போனால் அதற்குப்பின்னர்தானே அரசியலிலேயே அவர் காணாமல்ப் போனார்.மேலும் எனக்கு தரக்கூடாது என்று தடுக்கப்படுகிற விசயம் என்பது என்னுடைய உரிமையா அல்லது சலுகையா? கல்வி என்பதும் சமூக சமம் என்கின்ற உரிமையும் என்னுடைய உரிமைதானே?நான் சலுகை கேட்டால் அது சீர்திருத்தம் ஆனால் நான் கேட்பதோ உரிமை அது சமூக தலைகீழ் மற்றம்.நான் ப்றைதான் அடிக்க வேண்டும் என்பதை மாற்றி கலெக்டராக அமர்வது பார்ப்பனச்சமூக அமைப்பில் தலை கீழ் இல்லையா?நான் பனைதான் ஏற வேண்டும் என்பதை மாற்றி தாசில்தாராக அமர்வது சமூக மாற்றமில்லையா?நான் சூத்திரனாய் கஞ்சிக்கலையத்தோடு வயல்காட்டு வெள்ளாளனாய் திரிந்த நான் ஆலய அதிகாரியாக இருப்பது இந்தப் பார்ப்பனச் சமூக அடையாளதை அடித்துப்புரட்டிப் போடுவது இல்லையா?நான் செருப்பு தைப்பதை மாற்றி ஆர்.டி.ஒ.வாக இருப்பது சமூக மாற்றமில்லையா?இந்தச் சமூகம் தங்களது வர்க்கப் புரட்சிவரை மாறாமல் அப்படியே இருக்க வேண்டுமா?அப்படி மாறாமல் இருந்தால்தான் சரி இல்லையென்றால் நான் இந்தத் தரகு முதலாளித்துவ அமைப்பின் அங்கம் அல்லது எடுப்டி அப்படிதானே தோழரே?

இதற்கு இடஒதுக்கீடு தேவை இல்லையா?அதுவும் பிற்படுத்தப்பட்டவருக்குத் தேவையே இல்லையா?தங்களது இடஒதுக்கீட்டுக்கொள்கையை ஒருத் திட்டமாக வைத்துள்ளீர்கள்.அது தங்களது வெளீயீடான ‘சாதி தீண்டாமை ஒழிப்பு:நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’என்ற புத்தகத்தின் அடிப்படையில்தானே உள்ளது? அதை நிரூபிக்கும் வகையில் தங்களது புதிய ஜனநயகத்தில் பெ.தி.க.மீதான விமர்சனம் வந்துள்ளது.அதாவது

“அரசு ஒடுக்குமுறை எந்திரத்தில் இட ஒதுக்கீடு கேட்டு நாம் போராடுவதில்லை.அதே சமயம் ,பார்ப்பன மேட்டுகுடி கும்பல் இடஒதுக்கீட்டினை எதிர்ப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.”பு.ஜ.ஏப்ரல் 2009

அதாவது இடஒதுக்கீடு இருந்து தொலையட்டும்.அது ஒரு பெரிய விசயம் அல்ல.ஆனால் அதை எதிர்க்கும் குரல் வந்தால் கடுமையாக எதிப்போம்.ஏனெனில் அது ஒரு சலுகையே.இதுதானே தங்களது நிலைப்பாடு.மேலும் அக்கட்டுரையில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பார்ப்பன - மேட்டுக்குடியினரின் சாதிச் சண்டை என எழுதி தங்களது நிலைப்பாடு அப்புத்தகதிலிருந்து மாறுபடவில்லை எனக்காட்டியுள்ளீர்கள்.

சரி அதனடிப்படையி ஏற்கனவே கேட்க்கப்பட்ட கேள்விகளை த்ற்போது மீண்டும் வைக்கிறேன்.ஏனெனில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களினொற்றுமையை வளர்ப்பதற்கான வழி முறையை பின்பற்றாமல் அவர்களின் மோதலைத் தூண்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் ம.க.இ.க.விடம் சில கேள்விகளை முன் வைக்க வேண்டியுள்ளது.

1) தீண்டாமை இழிவுதொழில் அடிப்படையில் வந்ததல்ல- அம்பேத்கார்.ஆனால் ம.க.இ.க.வின் நிலைப்பாடு ‘தீண்டாமை இழிவுத்தொழில் அடிப்படையில் ஆனது’என்பதாகும்.

2) தாழ்த்தப்பட்டோர்மீதான அடக்குமுறை கொடுமைகளுக்கு ‘ஆதிக்க வெறியையும்,அதிகாரத் திமிரையும் இவர்களுக்கு வழ்ங்கியது தீண்டத்தக்க சாதி இந்துக்கள்தான்’என்கிறதும.க.இ.க. அப்படியானால் இங்கு சமூக ஆதிக்கவாதி யார்?

3)’அனைத்து ஆதிக்க சங்கஙக்ளையும் தடை செய்துவிட்டு தீண்டாமைக் குற்றம் புரியும் சாதிகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்து விட்டால் தீண்டாமை மறைந்துவிடுமா?சாதி ஒழிந்து விடுமா?

4)தீண்டாமைக் குற்றம் புரியும் நபர்களை மட்டிம் தண்டிக்காமல் அவர் சார்ந்த சாதியின் இடஒதுக்கீட்டை ரத்து செய்தால்தீண்டாமைக் குற்றம் அதிகரிக்குமா?குறையுமா?

5)பார்ப்பனர் ஒடுக்குமுறையும் சூத்திரர் ஒடுக்குமுறையும் ஒரே பார்வையில் பார்ப்பதுதான் நாணயமா?

6)ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் தீண்டாமையை ஒழிக்க வழி கூறாமல் 50 ஆண்டுகளாக உள்ள இட ஒதுக்கீட்டை ஒழிப்பதன் மோலம் தீர்வு ஏற்படுமா?இடஒதுக்கீடோ சாதிச் சங்கங்களோ இல்லாத 50 ஆண்டுகளுக்கு முன்பு சாதி ஒடுக்கு முறையே இல்லை என்று ம.க.இ.க. கூறுகிறதா?அடுத்த வேளை கஞ்சிக்கு இல்லாதவன் கையில் அரிவாளுடன் சாதி வெறி பிடித்து நிற்க வைப்பது எது?

7)‘தீண்டாமைக் குற்றம் புரியும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய் ‘என்பதுதீண்டாமைக்குக் காரணம் சாதி,சாதிக்கு ஆதாரம் இந்து மதம்.எனவே தீண்டாமையை ஒழிக்க வேண்டுமாயின் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என முழங்காமல் ‘இட ஒதுக்கீட்டை ரத்து செய் ‘என்பது பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.,சங்கராச்சாரிகளின் உள்நோக்கத்தோடு ஒத்துப் போகிறதே?இது சரியா?

8) ‘இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த்ங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமை ஒழிப்புக்கு தீர்வாகாது’என்று கூறும் ம.க.இ.க. தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா?எதிற்கிறதா?

9)சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் பிற்ப்டுத்தப்பட்ட்வரிடம் மட்டுமே உள்ளதா? தாழ்த்தப்பட்டவர்களுக்குள் உள்ள -ஒடுக்குமுறையில் தங்கள் மீது பிற்படுத்தப்பட்டோர் செலுத்துவதற்கு கொஞ்சமும் குறைவில்லாதஒடுக்குமுறை தீண்டாமைக்குள்- தீண்டாமையை எக்கண் கொண்டு பார்க்கிறது?இல்லை அப்படி இல்லை என்கிறதா?

10)’இழி தொழில் செய்வதால் தலித்துகள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் - ம.க.இ.க. அப்படியானால் பாபு ஜெகஜீவன்ராம் அமைச்சராக இருந்தபோதே பார்ப்பனரால் இழிவுபடுத்தப்பட்டது எதனால்?[ தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையைஎவ்வளவுதூரம் வலியுறுத்துகிறோமோ அதைவிட அதிக அளவு தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக எங்களது போராட்டம் உள்ளது.அதில் எமது தோழர்கள் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளானதும் சமீபத்திய நிகழ்வு.]

அடுத்ததாக சாதி ஒழிப்பில் பெரியார்.சாதியின் இருப்பு எதில் உள்ளது அய்யா?ஒன்று சாதியை தானே ஏற்றுக் கொள்வது மற்றொன்று அகமண முறை.முதலாவதாக சாதியை நானாக மறுப்பது.அது எப்படி சாத்தியம்?அது சம அனுபவம் மற்றும் சம நுகர்ச்சியில்தான் நானும் சமமான மனிதன் என்ற உணர்ச்சிவரும்.பெரியார் காலத்திலிருந்து ஆரம்பத்தில் பெரியார் தொண்டர்களால் ஆலய நுழைவு நடத்தப்பட்டது.ஆனால் பிற்காலத்தில் தன்னெழுச்சியாக ஆலய நுழைவு தலித் இளைஞர்களால் நடத்தப்படுகிறதே அது எப்படி?இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி கற்கப் போகும் தலித் மாணவர்கள் சம்மம் என்பதை உணர்ந்து ஆலய நுழைவு என்பது எனது உரிமை என்ற முழக்கத்துடன் செல்கிறான்.அது மட்டுமல்ல அவனது சாதி அடையாளங்கள் இழிவானவை என்றால் அதையும் அகற்றுகிறான்.இந்த நிகழ்வுகள் சாதிஒழிப்பின் கூறா இல்லையா?இது எதனால் விளைந்தது?படித்து வேலைக்குச்சென்ற தலித்துகள் தங்களது சாதி சார்ந்த இழி தொழிலை மறுப்பது மற்றும் கிராம்ங்களை விட்டு வெளியேறியவர்கள் த்ங்களது சொந்த ஊருக்கு வரும்போது தன் சமூக இளைஞரிடம் சமூக சிந்தனையை ஊட்டுவது[இமானுவேல் அவர்கள் இராணுவ்த்தி பணி புரிந்தபோது ஊருக்குவரும் போதெல்லாம் இளைஞர்களிடம் சுய மரியாதையை ஊட்டிவந்தார் என்பது வரலாறு ]இது போன்ற உதாரணங்கள் நிறைய முன் வைக்கலாம். எனவே இட ஒதுக்கீடு என்பது தானாக ஏற்றுவந்த சாதியத்தை மறுப்பது என்பதன் சமூகத்திட்டம்.

அடுத்ததாக மணமுறை.புற மணமுறை என்பது பெரியார் காலத்திலிருந்தே கட்சியின் நடைமுறை.இன்னும் சொல்லப்போனால் கட்சி மாநாடுகளில் பெண் கொடுத்து பெண் எடுத்துள்ளனர்.இது எதைக் காட்டுகிறது? புற மண முறை என்பது பெரியாரால் பெரியாரியக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதைத்தான்.விதவைத் திருமணம்,சமூக ஒடுக்கு முறைக்கு உள்ளான சமூகத்தில் பெண் எடுக்க வேண்டும் என்ற உறுதியும் நடைமுறையும் இருந்து வந்ததுஉதாரணம் [குத்தூசி குருசாமி]நிலை இப்படி இருக்க பெரியார் இயக்கத்திடம் சாதியை ஒழிக்க எந்த ஒரு திட்டமும் இல்லை என்பது எவ்வளவு பெரிய அடிப்படையில்லாக் கொச்சைப்படுத்தும் குற்றச்சாட்டு.

சரி தங்களது இயக்கத்தில் சாதி பற்றிய விளக்கம் என்ன?சாதி ஒழிப்புக்காண திட்டம் நடைமுறை என்ன?எதையுமே சொல்லாமல் பெரியார் மீது கூசாமல் கொச்சைப்படுத்துவது எதன் அடிப்படையில்?

இறுதியாக,ஆதிக்கச்சக்தியில் பார்ப்பனர் உண்டா இல்லையா என்பதில் குழப்பமான - பார்ப்பன சாதிய ஒடுக்குமுறை -என்பது

அதையும் ஒழுங்காகச் சொல்லாமல் நிலபிரபுத்துவம் எனக் கூறுவதன் அடிப்படை பார்ப்பனர் என்ற விசயத்திற்கு நிலபிரபுத்துவ சட்டை போட்டுக் காப்பாற்றுவது,

சமுக அடிப்படையில் இட ஒதுக்கிடா என்றால் இல்லை தலித்துகளுக்கு வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம் பிற்படுத்தப்பட்டவருக்குக் கிடையாது என்பது.அப்படியானால் மண்டல் அறிக்கை உடன்பாடு இல்லைதானே என்றால் இல்லை இல்லை அதைப் பார்ப்பனர்கள் எதிர்த்ததால் நாங்களும் எதிர்த்தோம் என்பது போன்றவை

தங்களது பார்ப்பன முகத்தைத் தெளிவாகத் தெரிகிறது என்பதே எமது கருத்து.இறுதியாக இவ்விவாதத்தில் காலம் கடந்து கலந்து கொள்வதால் இதைத் தொடக்கமாக எடுத்துக் கொண்டு இனி விவாதத்தைத் தொடருங்கள் தோழரே!

- மௌ.அர.சவகர்.

பழனி பெரியார் தி.க தோழரின் கட்டுரையைத் தொடர்ந்து இன்னும் சில தோழர்களும் சிறு சிறு குறிப்புகளை அனுப்பியுள்ளனர். அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, April 1, 2009

ம.க.இ.க வின் பெரியாரிய கிரகணம்

ம.க.இ.க இன்று நடத்தி வருகிற பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்கள், அது தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் ஏறுவதானாலும் சரி, தீட்சிதர்களை விரட்டும் போராட்டமானாலும் சரி, இவையெல்லாம் பெரியாரியல் போராட்டங்களே. இப்போராட்டங்களுக்காக அணிதிரட்டப்பட்ட சக்திகளும் வர்க்கக் கூட்டங்கள் அல்ல. (திமுக அரசும் போலீஸ் கூட்டமும் எந்த வர்க்கத்தைச் சார்ந்தவை?) தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் ஏற்றப்பட்ட விதத்திற்கு தி.மு.க அரசின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதை தோழர் மருதையன் பாணியில் சொல்வதானால் தோளில் ஏற்றிக்கொண்டு ஓடுவது என்பதாகச் சொல்லலாம். தோளில் ஏற்றுக்கொண்டு ஓடுவது சரி, தோளில் ஏற வேண்டுமே! ஜெயலலிதா அரசாக இருந்திருந்தால்! அந்தச் சந்தேகம் தோழர் மருதையனுக்கே இருந்திருக்கிறது. அதனை ம.க.இ.க வின் தில்லை வெற்றி (வெற்றி மாநாடு-1) மாநாட்டில் தொட்டுவிட்டுத் தொடராமல் விட்டுவிட்டார். ஏன்? அந்த சமூக எதார்த்ததை விளக்கமாக ஆராய்ந்து வெளியிடுங்கள்.

பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகனின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் தமிழகத்தில் தொடங்கப்பட்ட பார்ப்பனரல்லாதோர் நன்மைக்காக தொடங்கப்பட்ட தென்இந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி போன்ற திராவிடர் இயக்கங்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய - வரலாற்று ரீதியான சமூக சீர்திருத்தத்தின் அடித்தளம் முக்கியமானது. இந்நேரம் வடநாடாக இருந்திருந்தால் சூலாயுதத்தோடு அகோரிகளும், அம்மணக்குண்டி சாமியார்களும், சங்கப் பரிவாரமும் ரவுண்டுகட்டியிருந்திருப்பார்கள். மேலும் நீதிக் கட்சியின் ஆட்சியிலிருந்தே தொடர்ந்து பல அரசுகளால் - ஆங்கிலேய நீதிபதிகளால் தீட்சிதர்களின் தில்லையின் மீதான உரிமையை கேள்விக்கு உட்படுத்திப் பெறப்பட்ட நீதிமன்ற ஆணைகள் முக்கியமானவை. அதற்கும் முன், அனைத்து கோவில்களையும் இந்து அறநிலையத்துறையின் வாயிலாக அரசு ஏற்றதன் வரலாற்றை நீதிக்கட்சியினர் தொடங்குகின்றனர். சமீபத்தில் பெறப்பட்ட நீதிமன்ற ஆணைக்கு அடித்தளமாக இருந்ததும் அதற்கு முன் பெறப்பட்ட நீதிமன்ற ஆணைகளே. இதில் ம.க.இ.கவின் பணி இந்தப் பிரச்சனையை தாங்கள் முன் நின்று நடத்தியது. ஆனால் அவர்கள் அதற்காக தேடிக்கொள்ளும் விளம்பரம் மேற்சொன்ன எல்லா சமூகக் காரணிகளுக்கும் செல்ல வேண்டிய எல்லா பாராட்டுகளையும் அவை எவற்றிற்கும் செல்லவிடாமல் உறிஞ்சிக்கொண்டதே.

சமீபத்திய தில்லை வெற்றி மாநாட்டில் (வெற்றி மாநாடு-2), சம்பந்தமே இல்லாத கம்யூனிச மூலவர்கள் எல்லாம் வரிசையாக இருக்கப் பெயருக்குக் கூட ஒரு பெரியார் படம் இல்லையே. ஏன்? மாலை போடுவது எல்லாம் அப்பறம் இருக்கட்டும். (வேற வழியில்லை. இங்கே மாலை போடுறதுக்குத் தான் பெயரளவிற்குக் கூட மார்க்சு சிலையோ, லெனின் சிலையோ, ஸ்டாலின் சிலையோ, மாவோவின் சிலையோ இல்லையே. அது தான் சமூக எதார்த்தம்) கம்யூனிச மூலவர்களைச் சொல்லிக் கூட்டம் கூட்டவில்லையே. பெரியாரையும், தமிழையும் சொல்லிச் சொல்லித் தானே கூட்டினீர்கள். ம.க.இ.க எடுத்துச் செய்யும் வேலைகள், தில்லை போராட்டம் போன்ற பல போராட்டங்கள், எல்லாம் பெரியார் காட்டிய வழியில், பெரியார் அமைத்த களத்தில். ஆனால் சூட்டுவது எல்லாம் கம்யூனிசத்தின் பெயரை. இது தான் இருட்டடிப்பு என்பதா? அமுக்கத்தின் சூழ்ச்சி அல்லது Conspiracy of Silence. நீங்கள் திரட்டிய சக்திகள் எல்லாம் வர்க்கக் கூட்டமாக இருந்தாலாவது கம்யூனிசத்தின் பெயரைச் சூட்டலாம். ஆனால் அதுவுமில்லையே. தமிழ் மொழி மற்றும் இனம், அதற்கு எதிரான பார்ப்பன பாசிசத்தை எதிர்க்கும் சக்திகளின் பங்களிப்பு தானே பெரிதும் ஒத்துழைத்தன. இல்லையென்று நிரூபிக்க முடியுமா?

ஈழப் பிரச்சனையில், இன எழுச்சியில் கொந்தளிக்கும் தமிழர் கூட்டத்திற்கு, தேசிய இனங்களை ஒடுக்கும் பார்ப்பன பாசிச இந்தியாவை முன்னிலைப் படுத்தி எதிர்க்காமல் தரகு முதலாளிக் கூட்டத்தை முன்னிலைப்படுத்தும் வர்க்கப் பாசம் கொண்ட இந்தியாவை எதிரியாக முன்னிலைப் படுத்துவது ஏன்? நாமும் தரகு முதலாளிக் கூட்டத்தை எதிர்க்கிறோம். ஆனால் ஈழப் பிரச்சனையில்? தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் 2000-யில் வந்தது. அதற்கும் முன் இந்திய சதி என்பது 25 ஆண்டுகள் பழமையானது. அதில் வர்க்கப்பாசம் இல்லையே. பார்ப்பனப் பாசிசம் தானே ஈழத்தைக் கருவறுத்தது. பார்ப்பன அதிகாரிகள் அதில் முக்கியமானவர்கள். இன்றளவில் கூட இந்தியத் தரகு முதலாளிக் கும்பல் இலங்கையில் இல்லாமல் இருந்தாலும் இது தானே நிலை. எனவே அடிப்படையாக மூல காரணமாக இருப்பது தேசிய இனங்களை ஒடுக்கும் பார்ப்பன பாசிச இந்தியா. ஆக அதுதான் பிரதான அரசியல். அது ஏன் முன்னிலைப்படுத்தப்படவில்லை?

ம.க.இ.க வின் விளம்பரத் தாகம் பெப்சி, கோக்கையும் மிஞ்சிவிட்டது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் எல்லா அமைப்புகளுமே தங்கள் அடையாளத்தை மறுத்து தங்கள் ஒருங்கிணைந்த உணர்வைக் காட்டினர். ஆனால் ம.க.இ.க மட்டும் தான் தனது விளம்பர வெறியை முத்துக்குமாரின் சாவிலும் காட்டியது. ஏன்? ஆள் பிடிக்க இதுவாப்பா நேரம்? மேலும் இந்தப் பிரச்சனையின் ஆணிவேரான தமிழ்த் தேசிய இன விடுதலையை ஒழித்துவைத்துவிட்டு தரகு முதலாளிகளை எதிரியாக அடையாளம் காட்டியது தான் ம.க.இ.க வின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது. தமிழ் இன உணர்வோடு எழுகின்ற இளைஞர்களை அவர்களின் இன உணர்வை மழுங்கடித்துவிட்டு இல்லாத வர்க்க அரசியலை முன்னிறுத்திக் காட்டுவது ஏன்? அப்படியென்ன இந்தியப் பாசம்? இந்தியா நெடுகிலுமான நூலிலை போன்ற நக்சல்பாரிகளின் ஒட்டுறவிற்கு தமிழ்த் தேசிய உணர்வை பலிகொடுக்கும் சூழ்ச்சி என்ன? ( ம.க.இ.கவை பார்ப்பனர் எதிர்ப்பு சக்தியாகவே நாம் கணிக்கின்றோம்.) போராடும் சக்திகள் தேசிய இனச் சிக்கலைக் கையில் எடுக்காமல் வர்க்க சக்திகளை பூதக்கண்ணாடி போட்டு தேடப்போய் ஏற்பட்ட தவறுதலா?
எந்த முனையில் போராடுவது என்பது மிகவும் முக்கியம். கம்யூனிசம், மார்க்சியம் அதுகாட்டும் வர்க்கப் போர் என்று வெளிநாட்டு மாதிரிகளை எழுத்து மேசையில் விரித்து வைத்து எத்தனை முறை உத்து உத்துப் பார்த்தாலும் இந்தியாவிற்கு வர்க்கப்புரட்சியை கொண்டுவர முடியாது. ம.க.இ.க போராடுவது எல்லாம் பெரியார் வழியில், பெயர் வைப்பது என்னவோ கம்யூனிசம், பேனர்கள் படங்களில் முன்னல் காட்டுவது என்னவோ கம்யூனிச மூலவர்களை. அப்படிச் செய்தால் அது கம்யூனிசப் புரட்சியாகிவிடாது. ம.க.இ.க.விற்கு ஏற்பட்டிருக்கும் மதிப்பு பார்ப்பானை எதிர்த்ததாலும் தமிழை உயர்த்திப் பிடித்தாலுமே. அது நீண்ட நெடிய திராவிட மரபை வரலாறாக விரிக்கின்றது. அது நடத்திய வர்க்கப் போராட்டத்தால் அல்ல.

த.மு.எ.ச வின் உறுப்பினர்கள் ‘தண்ணியடித்து’த் திரியும் போக்கை விமரிசிப்பதைப் போல, பெயரியல் பேராசானையும், ரியல் எஸ்டேட் கம்பெனி விளம்பரத்தையும் தூக்கிப்பிடிக்கும் பெரியார்தாசனை விமர்சனம் செய்து புதிய ஜனநாயகத்திலோ, புதிய கலாச்சாரத்திலோ எழுதுவீர்களா? பெரியார்தாசன் எதற்கு உங்களுக்கு? பெரியாரிஸ்டுகளை கூட்டம் கூட்டவும், பெரியாரியல் வேடம் தரிக்கவும் தானே, பெரியாரியல் மரபை முன்னிறுத்தவும் தானே?. இது ஒரு உத்திதான். குற்றம் சொல்லவில்லை. உண்மையா இல்லையா சொல்லுங்கள்? பெரியார்தாசனுக்கும் ரூம் போட்டு கொடுத்து ‘தண்ணியடிக்க’ காசு கொடுத்து கூட்டங்களுக்கு அழைத்து வருகிறீர்களே உங்களுக்கும் த.மு.எ.சவிற்கும் என்ன வேறுபாடு?

பார்ப்பானை எதிர்த்து வர்க்கப் போராட்டமா நடத்தியது ம.க.இ.க? தீட்சிதனுக்கு ஆதரவாக இந்து ராம், சோ, சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா தான் வந்தாங்க, டாடாவோ, பிர்லாவோ, அல்லது தமிழ்நாட்டு முதலாளிகளோ வரவில்லை என்பது எதைக்காட்டுகிறது? ‘இந்து என்று சொல்லாதே பார்ப்பான் பின் செல்லாதே’ என்றக் கருத்தை எந்தக் கம்யூனிச சித்தாந்தத்தாலும் நியாயப்படுத்த முடியாது. இது பெரியாரியல். பிறப்பின் அடிப்படையில் சாதி என்ற ஏற்றத்தாழ்வையும் அதன் அடிப்படையில் ஒரு சமூகம் கட்டமைக்கப்பட்டிருப்பதையும் கம்யூனிச சித்தாந்தத்தால் விளக்க முடியுமா? அப்படிப்பட்ட ஆதிக்கத்தை எதிர்த்து உருவான சக்திகள் தான் ஆசீவகர்களிலிருந்து, பவுத்தம், சமணம் என்ற நீண்ட நெடிய மரபின் வழியாக திருநாவுக்கரசர், வள்ளலார் என்று தொடர்ந்து நீதிக்கட்சி, பெரியார் என அது இன்னும் இனியும் தொடரும். மார்க்சும், எங்கல்சும், லெனினும், ஸ்டாலினும், மாவொவும் இந்தியாவில் இல்லை. இது வரலாற்று எதார்த்தம். குறைந்த பட்சம் புத்தர் படம், அம்பேத்கார் படம், பெரியாரை பிடிக்கவில்லையென் றால் மகாவீரர் படமாவது வையுங்கள். அந்த மரபில் தான் இந்தப் போர் என்று மக்களுக்குத் தெரியும் உங்களுக்கு நீங்களே உணர்ந்துகொள்ள. இன்னும் இருக்கிறது, உணர்ச்சிவசப்படாமல் படிங்கள். அது ஒரு சமூகத் தன்மை.
உற்பத்தி உறவுகளின் கட்டுமானத்தால் இயங்கும் எல்லா சமூகத்திலும் கருத்தியல் தளங்கள் தாக்குரவை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அய்ரோப்பாவிலும் கூட. அது இந்தியாவில் மிகவும் கடுமையானதொரு வளர்ச்சியைப் பெற்றுவிட்டதால், அதன் செயல்பாடு கடவுள் போன்ற மூடநம்பிக்கைகளின் முதலீட்டில், ஆரிய திராவிட எதிர்நிலை இனப் போரின் வெளிப்பாடாக, ஒரு பண்பாட்டு படையெடுப்பைக் கட்டவிழ்த்து விட்டது. எனவே தான் பெரியார் பார்ப்பானைக் குறிவைத்தார்; கடவுள், மதம், மூடநம்பிக்கைகளை தகர்த்தார்; வரலாற்று இனப்பகைவனை எதிரியாக முன் நிறுத்தினார்; பார்ப்பன சாதி ஆதிக்க வெறி அது தன் வரலாற்றில் கண்டிராத மாபெரும் நெருக்கடியை தமிழகத்தில் கண்டது. அதன் தொடர்ச்சியாக பார்ப்பானைக் குறிவைக்கும் எந்தப் போராட்டமும் பெரியாரியல் போராட்டமே. அதை கம்யூனிசத்தின் பெயரில் செய்வது என்பது சூரியனை கை வைத்து மறைக்கச் செய்யும் சூழ்ச்சியே. பார்ப்பானை எதிர்ப்பது என்பதே பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை எதிர்ப்பது. அதன் மூலவர் பெரியாரே. அதற்கு சம்பந்தமே இல்லாத மார்க்சும், எங்கெல்சும், லெனினும், ஸ்டாலினும், மாவோவும் உங்கள் மேடைகளில் அலங்கரிக்கிறார்கள், பெரியாரை ஏன் மறைக்கிறீர்கள். இது தான் கம்யூனிசமா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கும் மரபையும் சமூகக் காரணிகளையும் மறைத்து வைப்பது தான் கம்யூனிசமா? இதைத்தான் கம்யூனிச மூலவர்கள் உங்களுக்குச் சொல்லித்தந்தார்களா?

பார்ப்பானை எதிர்ப்பது என்பதும், சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பதும் திராவிடர்களுக்கு எதிரான ஆரிய இன ஆதிக்கப்பண்பாட்டை எதிர்ப்பதே. எனவே ம.க.இ.கவும் ஒரு திரரவிட இயக்கமே. அதற்கான மரபு திராவிட இயக்கத்தில்தான் இருக்கின்றது. புதிதாக யாரும் அதைக் கண்டுபிடித்து விட்டதாக இருமாப்பு கொள்ள வேண்டியதில்லை. வரலாறு முன்னின்று உருத்துகின்றது. பெரியாரின் போராட்ட மரபிற்கு துரோகம் செய்யாதீர்கள்; இருட்டடிப்பு செய்யாதீர்கள். தமிழகத்தில் வெளிப்படையாக எழுந்த போராட்டம் இன எழுச்சி, பண்பாட்டு மீட்சிப் போராட்டம். ஏனென்றால், அது வரலாறு தொட்டு கூர்மைபட்ட போராட்டம். அதை யார் கையில் எடுத்தாலும் அது திராவிட இயக்க மரபு இல்லாமல் செய்ய முடியாது. இனியும் செய்யமுடியாது. அதை யாரும் மறுக்க முடியாது.
வர்க்கப் போராட்டத்தில் ம.க.இ.க என்ன சாதித்தது? கங்கைகொண்டானில் தொடர்ப் போராட்டம் என்று என்ன வடிவம் கொடுத்திருக்கிறீர்கள். கங்கைகொண்டானில் நந்திகிராமத்தை ஏன் நீங்கள் உருவாக்க முடியவில்லை. இருங்காட்டுக் கோட்டையில் ஏன் நந்திகிராமம் உருவாகவில்லை? அதற்கான மரபும் சமூகக் காரணிகளும் தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை. அதேபோல நந்திகிராமில் கம்யூனிசத்திற்கு எதிராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி கூட கம்யூனிசஅடித்தளத்தில் இயல்பாக உருவான எழுச்சியை பயன்படுத்தி டாடா நானோவை விரட்டினார். மம்தாவின் போராட்டம் அவரது தனிப்பட்ட வெற்றியல்ல. அங்கே ஏற்கனவே கனன்றுகொண்டிருந்த நக்சல்பாரிப் புரட்சியின் தொடர்ச்சி தான் அவ்வெற்றி.
அப்படிப்பட்ட வர்க்கப்போராட்ட மரபை தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் உங்களைப் போன்ற புரட்சிகர சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்து செய்யவேண்டும். ஆனால் பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பை கையில் எடுத்து நிறைய செய்ய முடிகின்றது என்றால் அதற்கான மரபையும், சமூகக் காரணிகளையும் திராவிட இயக்கங்கள் வலுவாக ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு கருணாநிதி இல்லாமல் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ற தோழர் மருதையனின் கேள்விக்கு பதில் இங்கே இருக்கின்றது. எனவே அவ்வகையில் ம.க.இ.க ஒரு திராவிட இயக்கமே. அப்படிப்பட்ட ஒரு பரிமாணம் தான் உங்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. திராவிட இயக்கத்தின் மரபையும் அது ஏற்படுத்தியிருக்கும் சமூகக் காரணிகளையும் யார் நினைத்தாலும் உதறிவிட முடியாது; அதுவேயில்லாமல் புதிதாக செய்யும் சமூக எதார்த்தமும் இப்பொழுது இல்லை; எனவே அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்; வரலாற்றிலிருந்து மறைக்க முயற்சி செய்யமுடியாது.

ஒரு புரட்சி அல்லது போராட்டம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். கம்யூனிச ஆதாரத்தால் மட்டுமே ஒரு புரட்சியை செய்ய முடியும் இல்லையென்றால் முடியாது என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் இயல்பிற்குத் தக்கவாறான பிரச்சனைகளை முன்னிறுத்தி பாதிக்கப்பட்ட சக்திகள் அமைப்பு ரீதியாக போராட வேண்டும். அதற்கு கம்யூனிசம் கூடத் தேவையில்லை.

எடுத்துக்காட்டாக கியூபப் புரட்சி. கியூபப் புரட்சி ஒரு கம்யூனிசப் புரட்சியல்ல. அங்கேயிருந்த கம்யூனிஸ்டுகளின் கபடம் பிடிக்காமல் ஒதுங்கியவர்தான் பிடல் காஸ்ட்ரோ. ஆனால் அதற்குப் பின் மார்க்சின் கொள்கைகளை ஏற்று இடதுசாரி ஆட்சிமுறையைக் கொண்டு வந்தார். அதுவும் கூட இன்றளவிலும் ஒருகட்சி ஜனநாயகம் தான். இன்னொரு சந்தேகம், ஒரு கட்சி மட்டும்தான் என்றால் அது எப்படி ஜனநாயகம் ஆக முடியும்? பெனிவேலண்ட் டிக்டேட்டர்சிப் என்றும் அதனைச் சொல்லலாம். ஸ்டாலினைப் போல. ஸ்டாலினும் ஒரு சர்வாதிகாரிதான். (ஏன் ஸ்டாலினுக்குப் பின் முதலாளி வர்க்கம் கையோங்கியது என்று உணர்ச்சிவசப்படாமல் யோசியுங்கள், அப்போது புரியும், ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்யும் வெறும் சர்வாதிகாரியாக இருந்து இறந்துவிட்டார் என்று. கம்யூனிசத்திற்குத் தேவையான கட்டமைப்பை பெரிதாக செய்துவிடவில்லை.) ஆனால் அடித்தட்டு மக்களுக்கான சர்வாதிகாரி. அதாவது பாட்டாளி மக்கள் சர்வாதிகாரி.

கம்யூனிசம் என்பது இதுநாள்வரை உலகில் எங்குமே இருந்ததேயில்லை Primitive Communism தவிர. கம்யூனிசம் என்பது மார்க்சு சொல்வதைப் போல ஒரு அரசில்லா பொது உடமைச்சமூகத்தின் உயரிய மக்கள் பண்பாடு (அது ஒன்றைத்தான் Communism என்று சொல்லமுடியும்). அதை நோக்கி சமூகம் இயங்கும் என்பது மார்க்சின் கணிப்பு. மேலும் அதற்கான போராட்டத்தை வர்க்க சக்திகள் உரிய நேரத்தில் கையில் எடுக்காவிட்டால் சமூகம் மீண்டும் காட்டுமிராண்டித் தனமாக மாறிவிடும் என்றும் சொல்கிறார் மார்க்சு. ஒருவேளை அந்தப் புரட்சிக்கான தருணம் தப்பிவிட்டதா என்று கூட அய்யப்படவேண்டியதாக இருக்கின்றது. அவர்கண்ட பாட்டாளி வர்க்கப் போராட்டம் அய்ரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ நடைபெறவில்லை. இன்னும் நடைபெறவில்லை. அமெரிக்காவின் வர்த்தக நிறுவனங்களின் ஊழல் சந்தி சிரித்து மக்கள் தெருவிற்கு வந்த பின்னும். ஏன்? ஏன் மக்கள் வர்க்கமாக ஒன்றிணைய முடியவில்லை?

முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமாக ஏகாதிபத்தியம் வந்துவிட்டது என்று லெனின் சொன்னார். ஏகாதிபத்தியம் என்ற கூறு மார்க்சின் ஆய்வில் இருந்தாலும் அப்படிப்பட்ட சமூக முறையை மார்க்சு தனியாகப் பிரித்துக் கணிக்கத் தவறிவிட்டாரா? அல்லது அப்படிப்பட்ட தனி சமூக முறை இல்லையென்பதாலா? எனில் முதலாளித்துவத்திற்குப் பின் ஏகாதிபத்திய உச்சம், அதற்குப் பின்? யார் கணிப்பது இந்தச் சமூக இயக்கத்தை? அது எல்லா சமூகத்திற்கு ஒரே மாதிரியாகவும் இருக்காது. மார்க்சியம் உண்மையிலேயே நம்மை சரியாக வழிநடத்துகின்றதா?

சொல்லுங்கள், மார்க்சிய லெனினிய மாவோயிச சக்திகளே, இந்தச் சமூகத்தின் இன்றைய கட்டம் என்ன, அடுத்த கட்டம் என்ன? மார்க்சிய மூலவர்களை உய்த்துணர்ந்து கணித்துச் சொல்லுங்கள். மிஞ்சிப்போனால் என்ன சொல்வீர்கள். அடுத்த கட்டம் ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான போர் என்று சொல்வீர்கள். சரி அதற்குப்பின்னாவது வர்க்க சக்திகள் புரட்சியை கையில் எடுக்குமா? எடுத்தால் தான் புரட்சி. மார்க்சியம் என்பதே மாற்றுவதற்கான சித்தாந்தம் அல்லவா? ஆனால் ஏகாதிபத்தியங்கள் சமரசம் செய்துகொள்கின்றனவே. புரட்சிக்கான தருணத்தை வர்க்க சக்திகள் தவறவிடும் ஒவ்வொரு முறையும் மார்க்சியம் அழுகின்றது. மார்க்சின் கோட்பாட்டின் படி வரவிருக்கும் சமூகத்தின் உற்பத்தி சக்திகள் நிகழ்கால சமூகத்தில் தோன்றி வளர வேண்டும் அல்லவா? முதலாளித்துவத்திற்கு முன்னிருந்த எல்லா சமூகத்திலும் ஆளும் வர்க்கங்கள் சண்டைபோட்டுக்கொண்டு அடுத்தகட்ட ஆளும் வர்க்கம் கோலோச்சுகிறது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் மட்டும் தான் ஆளும் வர்க்கத்தை எதிர்க்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு வெல்லும் திறன் இருக்கிறது என்று கூறுகிறார். ஆக பாட்டாளி வர்க்கத்தினுடைய உற்பத்தி சக்தி என்ன? பாட்டாளி வர்க்கமே ஒரு உற்பத்தி சக்திதான். அது சர்வாதிகாரம் செய்து முதலாளித்துவ சக்திகளை எல்லாம் ஒழித்து கம்யூனிசப் பண்பாட்டை வளர்க்க வேண்டும். அதற்கு உலகம் தழுவிய கம்யூனிசக் கூட்டணி தேவைப்படுகிறது. சோவியத் ரசியா காலத்தில் செஞ்சீனம் இருந்தும் கூட்டணி சக்தியாக வளராமல், விரிசல் ஏற்பட்டு முரண்பட்டிவிட்டார்கள், பெரிய ஏமாற்றமே.

மாவோ கண்ட செஞ்சீனம் இப்பொழுது எந்த வழியில் செல்கின்றது? ஏன் முதல் கட்ட புரட்சியாளருக்குப் பின் வருவோர் எல்லாம் ஏமாற்றிவிடுகிறார்கள்? அது எதன் குறை? தனி மனித குறையாக இருக்க முடியாது. சித்தாந்ததில் என்ன பிழையிருக்கின்றது? தேடவேண்டிய அவசியம் இருக்கின்றது?

இன்றைய சீனம், அண்டை நாட்டில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டும் காணமல் விட்டுவிட்டு, இலங்கைப் பேரினவாதத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தில் வக்காளத்து வாங்குகின்றதே? இலங்கையின் இனப்படுகொலைக்கு மூடுதிரை போடுகிறதே. இதன் பொருள் என்ன? அமெரிக்கக் கொடியை எரிப்பாய் போற்றி ம.க.இ.கவே சீனத்தின் கொடியை தீயிட்டுக் கொளுத்தத் தயாரா? இதோ தீக்குச்சி.

சோவியத் ரசியாவே, ஸ்டாலின் காலத்தில், உலகப் போரில் தனது கூட்டணியான இங்கிலாந்திற்கு எதிராக தனது உதவியை நாடிய சுபாஷ் சந்திர போசுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உதவ முடியாது என்று கைவிரித்து விட்டது. அது ஏனோ? அப்படி உதவி பண்ணியிருந்தாலாவது சுபாசின் கீழான ஒரு கம்யூனிச இந்தியாவை நாம் அப்போதே கண்டிருப்போம். கண்டிருப்போமா, இல்லையா? அல்லது அதற்கு வாய்ப்பு இருந்ததா இல்லையா? ஆசியாவே கம்யூனிச ஆசியாவாக ஆகியிருக்கும். இது ஸ்டாலினின் தொலை நோக்கு பார்வையற்ற செயலா? உணர்ச்சிவசப்படாமல் யோசியுங்கள். நமக்கு யார்மீது தனிநபர் வழிபாடு வேண்டியதில்லை. அது தான் கம்யூனிசம். இட்லரின் ஜெர்மனியை எதிர்த்துக் கொண்டே ஆசியாவில் காலணியாதிக்கத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான சக்திகளை ஊக்குவிப்பதில் பெரிய சிரமம் இருந்திருக்க முடியாது.

ஸ்டாலினின் பிழைகள் என்று ஒரு சமூக ஆய்வு இந்தவகையில் மார்க்சியத்திற்குத் தேவைப்படுகிறது என்பது என்னுடைய அபிப்பிராயம். அது மாவோவிற்கும் பொருந்தும். கம்யூனிச சக்திகளே தீவிரமாக உண்மையாக சுயபரிசீலனை செய்யுங்கள். உங்கள் சமூகத்தின் தன்மையை சரியான கோணத்தில் ஆய்வு செய்யுங்கள். கம்யூனிசம் உதவியாக இருக்கலாமேயொழிய கடிவாளமாக இருக்கக் கூடாது. இந்த உலகத்தில் ‘ஒரே ஒரு சரி’ மட்டும் தான் இருக்க முடியும் என்று முட்டுச் சந்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஆனால் நாம் பின் நவீனத்துவ வாதியல்லோம். அறிவியலில் மட்டும் தான் ‘ஒரே ஒரு சரி’ என்று கூற முடியும். சமூகம், பண்பாடு, ஜனநாயகம் போன்ற தளங்களில் அப்படி எதுவும் இல்லை. சமூகவியலையும் ஓர் அறிவியல் என்று சொன்னாலும் ஒரு அறிவியல் புலமாக அது இல்லையே.

ஒரு சமூகத்தின் தன்னியல்பிலான சீற்றம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு அதன் வழியாக மக்களை ஒன்றுதிரட்டி புரட்சி வென்று, அதற்கடுத்த கட்டமாகத்தான் இடதுசாரித் தன்மையை அதனுள் புகுத்த முடியும், வேண்டும். இல்லையென்றால், இயல்பற்ற வழியில் ஒன்று திரட்ட முடியாமல், ஆரம்ப கட்டத்திலேயே கம்யூனிசம் தோற்றுப் போச்சே என்ற பழிச்சொல்லை கம்யூனிசத்திற்கு வாங்கிக்கொடுக்காதீர்கள். எதையுமே புரிஞ்சுக்காம போராடாதீங்கப்பா.

மற்றொன்று, திராவிட இயக்க மரபில் நின்று போராடிக்கொண்டு திராவிட இயக்க சமூகக் காரணிகளைப் பயன்படுத்திக்கொண்டு வர்க்க வேடம் போடவேண்டாம். வரலாற்றைத் திரிக்க வேண்டாம்.

தமிழகத்தில் புரட்சிகர சக்தியாக முன்வர வேண்டுமென்றால், பெரியாரைக் கையில் எடுக்காமல் முடியாது. பெரியாரியக் களத்தில் நின்றுகொண்டு போராடி அதற்குக் கம்யூனிச முகமூடி போட்டுக்கொண்டால் இங்கே கம்யூனிசம் தான் வெல்கிறது என்று முன்னிறுத்தலாம். அப்படி கம்யூனிசத்தை முன்னிறுத்திவிட்டால், பெரியாரியலும் திராவிட இயக்க மரபையும் குழிதோண்டிப் புதைத்துவிடலாம். இடையிடையே பெரியார் தவிர்த்த திராவிட இயக்கத்தை விமர்சனம் செய்து ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையும் கிரகணத்தால் மூடிவிடலாம். பிறகு இங்கே பெரியாரும் இல்லை, திராவிட இயக்கமும் இல்லை, கம்யூனிசம் மட்டும் தான் என்று வரலாற்றை திசைதிருப்பிவிடலாம். என்றெல்லாம் இயல்பாகவே அயோக்கியத் தனமாக பார்ப்பான் ஒருத்தன் தான் சிந்திப்பான். ம.க.இ.க வில் பார்ப்பான் யாரும் இல்லையே! எச்சரிக்கை. கிரகணம் கொஞ்ச நேரம் தான்.சூரியன் தான் நிரந்தரம்.

பெரியாரின் தத்துவத்தை வென்றுவிட்டு கம்யூனிச சித்தாந்தத்தை முன்னிறுத்துங்கள். ஏற்றுக்கொள்கிறோம். பெரியாரிய களத்தில் கம்யூனிச வேடம் போடுவதால் பெரியாரியலை குழிதள்ள முடியாது. கம்யூனிசமே பெரியாரியல் பக்கம் தான் நிற்கும். வேண்டுமென்றால் என் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அக்ரகாரத்தில் போய் ஆள்பிடித்துக்கொண்டு, கூட்டம் திரட்டிக்கொண்டு வாருங்கள் பார்ப்பானையும், சமஸ்கிருதத்தையும் எதிர்த்து வீழ்த்த. நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் கம்யூனிசத்தை. செய்ய முடியுமா?

இதுவே எனது புரிதல். எதையும் சந்தேகிப்பாய்; சிந்திப்பாய்; செயல்படுவாய்.